646மேருமந்தர புராணம்  


 

தங்களெல்லாருக்கும் நாதனாக, (அமைத்து), சூழ்ந்து - சுற்றி நிறைந்து,
மாயிரும் - மிகவும் பெரிதாகிய, விசும்பும் - ஆகாயமும், மண்ணும் -
பூமியும்,  மறைய - மறையும்படியாக, வானவர்கள் - இந்திராதி ஸர்வ
தேவர்களும், வந்தார் - வந்தார்கள், எ-று.                 (339)

1387. முழங்கின முரச மெங்கும் முரன்றன சங்க முன்னே
     யெழுந்தன ரேறு சீயம் யானைமா வேறி விண்ணோர்
     விழுந்தபூ மாரி விண்ணை விழுங்கின பதாகை வெள்ள
     மெழுந்தவேத் தரவங் கீர்த்தி யியம்பின காள மெங்கும்.

     (இ-ள்.) எங்கும்    -    எவ்விடங்களிலும்,       முன்னே -
முதன்மையாக, முரசம் - பேரிகைகள், முழங்கின - சப்தித்தன, சங்கம்
- சங்கு    வாத்தியங்களும்,   முரன்றன - ஒலித்தன, விண்ணோர் -
தேவர்கள்,  ஏறு - விருஷபத்திலும், சீயம் - ஸிம்மத்திலும், யானை -
யானைகளிலும்,    மா     -  குதிரைகளிலும், ஏறி - ஏறிக்கொண்டு,
எழுந்தனர்      - (கேவல பூஜையை இவர்கட்குச் செய்யும்பொருட்டு
விரைந்து)    சென்றார்கள்,  பூமாரி - புஷ்ப வருஷங்கள், !விழுந்த -
சொரியப்    பெற்றன,     பதாகை வெள்ளம் - துவஜக் கொடிகளின்
பெருக்கம்,  விண்ணை விழுங்கின - ஆகாயத்தை மறையப் பண்ணின,
ஏத்தரவம்  - அரஹந்தஸ்துதியாகிய சப்தமும், கீர்த்தி - புகழொலியும்,
எழுந்த   - வியாபித்தன, எங்கும் - எவ்விடங்களிலும், காளம் - சிறு
சின்னங்கள், இயம்பின - சப்தித்தன, எ-று.                 (340)

1388. அரம்பையர் நடம்பு ரிந்தா ரம்பர மரங்க மாக
     நரம்பொலி பொலிந்த வெங்கு நண்ணினார் மண்ணை விண்ணோர்
     கரங்களுங் குவிந்த கண்ணீர் பொழிந்தன காதி நான்மை
     யுரங்கடிந் திருந்த வீர ருறுதுணை யடிப ணிந்தார்.

     (இ-ள்.) அரம்பையர்    -     தேவ நர்த்தகிகள், அம்பரம் -
ஆகாயமே,    அரங்கமாக     -  நாடக சபையாக, நடம்புரிந்தார்! -
நர்த்தனஞ்  செய்தார்கள், எங்கும்  - எவ்விடங்களிலும், நரம்பொலி -
வீணாவாத்தியாதி    நரம்புக்கருவிகளின்    சப்தமானது, பொலிந்த -
இனிமையாக    நிறைந்தன,   விண்ணோர்! - தேவர்கள், மண்ணை -
இப்பூமியில்    -    நண்ணினார்    - அடைந்தார்கள், கரங்களும் -
அவர்களுடைய ஹஸ்தங்களும், குவிந்த - முகுளிதமாயின, கண்ணீர் -
ஆனந்தக்    கண்ணீர்த்    துளிகள், பொழிந்தன - சொரிந்தன, காதி
நான்மை  - காதி சதுஷ்டயங்களின், உரம் - சக்தியை, கடிந்திருநத -
நீக்கி   ஜெயித்திராநின்ற, வீரர் - அனந்த வீர்யத்தையுடைய இவ்விரு
கேவலிகளுடைய,    உறுதுணையடி - பெருமை பொருந்திய  இரண்டு
பாதங்களை, பணிந்தார் - வணங்கினார்கள், எ-று.            (341)