648மேருமந்தர புராணம்  


 

    மருவிய வுயிர்வினை மறுவற வருளும்
    பொருவரு திருவடி புகழ்தர வடைதும்.

     (இ-ள்.)  (அவ்வாறெழுந்து   நின்றவர்கள்   மேலும்  துதிக்கத்
தொடங்கி),   வெருவுறும்   - ஸ்வபாவத்தில் எப்போதும் பயத்தையே
யடைந்திரா  நின்ற, துயரொடு - விலங்குகதி துன்பத்துடன், விழவெழு
துயரும்    - எழும்பித்   தலைகீழாக வீழ ஸதா உண்டாகும் நரககதி
ஸ்வாபாவிக   துக்கமும்,  கருவுறு துயரொடும் - கருப்பத்திலடைகின்ற
மனுஷ்ய   கதி   துன்பமும்,   கடைவருதுயரும்  - மரண காலத்தில்
மிகவுமடைகின்ற   தேவகதி ஸ்வாபாவிக துன்பமும், மருவிய - இந்தச்
சதுர்க்கதி   துன்பத்தில் சேர்ந்திராநின்ற, உயிர் - ஜீவன்களின், வினை
மறுவு - கர்மமாகிற களங்கமானது, அற - நீங்கும்படியாக, அருளும் -
திவ்வியத்துவனியால்   தர்மோபதேசஞ்   செய்கினற,    பொருவரு -
உபமையில்லாத    உங்களுடைய,    திருவடி - அழகிய பாதங்களை,
புகழ்தர     - எங்கட்குக்   கீர்த்தி யுண்டாகும்படியாக, அடைதும் -
ரக்ஷணையாக அடைகின்றோம், எ-று.                      (344)

1392. பருதியி னொளிவெல பகைபசி பிணிகெட
     வருவன மலர்மிசை மதனனை நலிவன
     வுயிருறு தொடர்வற வெறிவன வுலகினி
     லரியன பெரியநும் மடியிணை யடைதும்.

     (இ-ள்.) பருதியின் - சூர்யனுடைய, ஒளி - ஜோதியையும், வெல
- ஜெயிக்கவும்,   பகை  - சத்துருத்துவமும்,பசி -க்ஷுதாதியும், பிணி -
ரோகாதிகளும்,    கெட -    நீங்கவும்,  மலர்மிசை   - தேவநிர்மித
செந்தாமரைப்பூவின்    மேல்,   வருவன - உலாவி   - வருவனவும்,
மதனனை   -    மன்மதனை,    நலிவன - வருத்துவனவும், உயிர் -
ஆத்மன்களிடத்தில்,    உறு  - அனாதியாக விபாவத்தாலடைகின்றன,
தொடர்வு    -  பாவ கர்ம திரவியகர்ம நோகர்மங்களாகிய ஸம்யோக
ஸம்பந்தங்களை, அற - நீங்கும்படியாக, எறிவன - சேதிக்கின்றனவும்,
உலகினில்   - லோகத்திலே, அரியன - பெறுதற்கரியனவும், பெரிய -
மாஹாத்மியமுடையனவும், (ஆகிய),  நும் - உங்களுடைய, அடியிணை
- பாதங்களை, அடைதும் - சேர்கின்றோம், எ-று.

1393. முறைபொறி மறைகெட முழுதுமோர் கணமதி
     லறியுநல் லறிவுடை யிறைவநும் மடியிணை
     யுறுதவர் மனமிசை யுறைவன வுயிருறு
     பிறவியை யறவெறி பெருமைய சரணம்.

     (இ-ள்.) முறை   - கிரமமாக   அறியும்படியான,    பொறி -
இந்திரியங்களாலாகிய ஞானமும், மறை - ஆவரணீயங்களும், கெட -
நீங்க, முழுதும் - ஸக