லார்த்த ஸமூகத்தினையும், ஓர் கணமதில் - ஒரு ஸமயத்தில், அறியும்
- ஞாத்துரு பரிசித்தியினாலேஞேயாவலம்பனமன்றி அறிகின்ற, நல் -
நன்மையாகிய, அறிவுடை - கேவல ஞானத்தையுடைய, இறைவ -
நாதனான தன்மையடைந்தவரே, நும் - உங்களுடைய, அடியிணை -
பாதங்கள், உறுதவர் - மஹா தபஸ்விகளுடைய, மனமிசை - மனதிலே,
உறைவன - தங்கும்யடியானவை (அதாவது : அவர்களால்
தியானிக்கும்படியான நிலைமையையுடையன), உயிர் -
ஸம்ஸாரஜீவர்கள், உறு - அடைந்திராநின்ற, பிறவியை -
ஜனனமரணமான அந்த ஸம்ஸாரத்தை, அற - நீங்கும்படி, எறி -
கெடுக்கின்ற, பெருமைய - உயர்வையுடையன, (ஆதலின்,
அப்பாதங்களே), சரணம் - இப்பொழுதெங்களுக்குப் புகலிடமாம்,
எ-று. (346)
1394. குலிகமோ டிகலுவ குவிமுலை புணருநர்
தலைமையை நகுவன தவநெறி வருவன
உலகினை யொருநொடி யகவையி னளகுவ
மலைவில நிலையநும் மலரடி யடைதும்.
(இ-ள்.) குலிகமோடு - ஜாதிலிங்கக் குழம்பினோடு, இகலுவ -
செஞ்சந்தனாதிகள் பூசப்பெற்று ஒப்பனை செய்யப்பட்டமைந்த
செம்மையால் எதிர்த்து அதனைத் தாழ்மைப்படுத்துவனவும், குவி -
திரட்சி பொருந்திய, முலை - ஸ்தனங்களைக் கண்டு மோஹித்து,
புணருநர் - காமத்தால் புணர்ச்சி செய்து தங்கியிரா நின்றவர்களுடைய,
தலைமையை - இறைமையை, நகுவன - சிரிப்பனவும், தவ நெறி -
தபோ நெறியில், வருவன - வரப்பட்டனவும், உலகினை - லோகத்தை,
ஒரு நொடியகவையின் - ஒரு க்ஷண நேரத்திலே, அளகுவ -
பிரத்தியக்ஷ ஞானத்தால் பிரமாணிப்பனவும், மலைவிலா -
கெடுதலில்லாத, நிலைய - கேவல ஞானாதிகுண
நிலையினையுடையனவும், (ஆகிய), நும் - உங்களுடைய, மலரடி -
மலர்ப்பாதங்களை, அடைதும் - அடைகின்றோம், எ-று. (347)
1395. உயர்வற வுயரிய வுலகினி னுயிர்களின்
அயர்வற வறவமு தருளுவ வமரர்கள்
மயர்வற மணிமுடி யணிவன பணிவார்
துயர்வற வெறியுதுந் துணையடி தொழுதும்.
(இ-ள்.)உலகினின் - இந்த லோகத்திலே, உயிர்களின் - பவ்விய
ஜீவன்களுடைய, அயர்வு - வருத்தங்கள், அற - நீங்கும்படியாக,
அறவமுது - தர்மா மிருதத்தை, அருளுவ - ஈகின்ற
தன்மையுடையவைகளும், அமரர்கள் - தேவர்கள், மயர்வற - விபாவ
மயக்கங்கள் நீங்கும்படியாக, மணிமுடி யணிவன - அழகிய
கிரீடங்களில் அணியத் தக்கனவும், பணிவார் - வணங்குவார்களின்,
துயர்வற - துக்கங்களெல்லாம் நீங்கும்படியாக, எறியும் - கர்ம
மலங்களைக் கெடுப்பன |