வைசயந்தன் முத்திச்சருக்கம் 7


 

     (இ-ள்.)   அம்   -   அழகிய,  மலர் -  புஷ்பங்களையுடைய,
சோலையெல்லாம்  -  தோப்புகளெல்லாம், குழைகளும் - தளிர்களும்,
மலரும்  -  புஷ்பங்களும்,    செற்றி  -  நெருங்கி,   குயில்களும் -
கோகிலங்களும்,  மயிலும் - மயிற் பறவைகளும், ஆர்த்து - சப்தித்து,
மழையென - மாரியைப்போல,  மதுக்கள் - மதுத்துளிகள்,   பெய்து -
சொரிந்து, வண்டோடு - வண்டுகளோடு,  தும்பி - தும்பி இனங்களும்,
பாடி   -  கீதங்களைப்பாடி,   விழைவுறும்   -   விரும்பும்படியான,
தகையவாகி - அழகுடையனவாகி, வேண்டினார் -விரும்பினவர்களுக்கு,
வேண்டிற்று - இச்சிக்கப்பட்டவைகளை,  ஈயும் - கொடுக்கும்படியான,
அழகுடை - அழகுவாய்ந்த, மரங்கள் - கற்பகத்தருக்களை, போன்ற -
ஒத்திருப்பனவாம். எ-று.                                   (12)

13. மதியொடு மீன்க ணீல மணித்தலத் திருந்த வேபோற்
   பொதியவீழ் கமல மாம்பல் பூத்தன பொய்கை யெல்லாம்
   மதிமிசைக் கறுப்பின் வெண்டா மரைமிசை வண்டின் பாடல்
   மதியன்ன முகத்தி னல்லார் வாய்ப்பண்ணி னெழுச்சித் தொன்றே.

     (இ-ள்.) மதியொடு - சந்திரனோடு, மீன்கள் - நட்சத்திரங்களும்,
நீல மணித்தலத்து - இந்திர நீலரத்தினத்தாலாகிய பூமியில், இருந்தவே
போல் -  இருந்ததுபோல,  பொய்கையெல்லாம் - குளங்களிலெல்லாம்,
பொதியவிழ்ந்த  -  கட்டவிழ்ந்த, கமலம்  -  தாமரையும், ஆம்பல் -
அல்லியும்,    பூத்தன     -     புஷ்பித்தனவாம்;      மதிமிசை -
சந்திரன்மேலேயிருக்கின்ற,  கறுப்பின் - களங்கத்தைப்போல, வெண் -
வெளுப்பாகிய,  தாமரைமிசை - தாமரைப்  பூவின்மேல்,  (இருக்கின்ற)
வண்டு   -   வண்டுகளின்,   இன்   -   இனிமையாகிய,   பாடல் -
இசைப்பாடலானது,   மதியன்ன   -   சந்திரன்போன்ற,  முகத்தின் -
முகத்தையுடைய,   நல்லார்   -  ஸ்திரீகளது,   வாய்  -  வாயினால்
பாடப்பட்ட,    பண்ணினெழுச்சித்து   -   கீதத்தினது  ஆரோகணம்
போன்றதாகிய, ஒன்று - ஒன்றாம், எ-று.                      (13)

 14. அன்னமென் குருகு தாரா நாரைவண் டானங் கோழி
    துன்னின பெடைக ளோடுந் துறந்தவு மழைத்த தோற்ற
    மின்னரிச் சிலம்பி னல்லார் சில்லரி சிலம்ப வாடிக்
    கன்னியாழ் பயிலுஞ் சாலை போன்றன கயங்க ளெல்லாம்.

     (இ-ள்.)  கயங்களெல்லாம்  -  தடாகங்களெல்லாம், அன்னம் -
அன்னப் பறவைகளும், மென் - மிருதுவாகிய,  குருகு - குருகென்னும்
ஒருவித  நாரையும்,   தாரா  -  தாராவென்னும்  புள்ளும்,  நாரை -
பெருநாரையும், வண்டானம் - வண்டானமென்னும் நாரையும், கோழி -
நீர்க்கோழியும்  (ஆகிய  நீர்வாழ்  பறவைகளில்),  பெடைகளோடும் -
பெட்டைகளோடும், துன்னின - சேர்ந்திரா நின்றவைகளும், துறந்தவும்
- துணையைவிட்டு நீங்கினவைகளும்,  அழைத்த - குரல்விட்டுக்கூவித்
தங்கள்     இணைகளை    யழைத்ததனாலேற்பட்ட,    தோற்றம்  -
விதத்தினாலே, மின் -