74மேருமந்தர புராணம்  


 

அதிர -   அதிரும்படியாக,   ஆர்க்கும் -  சப்திக்கும், தோளினை -
கைகளை,   துணிப்பனென்று  -   வெட்டுவேனென்று,   வாளினை -
வாளாயுதத்தை,   சுழற்றி   -   சுழற்றிக்    கொண்டு,  தோன்றும் -
தோன்றுவான், எ-று.                                      (13)

 154. அழலுமிழ்ந் திலங்கும் வெவ்வா யோரியா யழைத்துக் கத்தும்
     சுழலும்வெங் கண்ண வாய வெருவையாய்ச் சுழல வோடும்
     மழையெனத் துறுகற் பொய்யா மலையெடுத் திடவந் தெய்து
     முழையவர் நடுங்க வெல்லா வூனமு மொருங்கு செய்யும்.

     (இ-ள்.) அழல் - அக்கினியை, உமிழ்ந்து - சொரிந்து, இலங்கும்
- விளங்கும்,    வெவ்வாய்   -  வெப்பம்பொருந்திய  வாயையுடைய,
ஓரியாய்  - குள்ளநரியாகி, அழைத்து - குரல்கொடுத்தழைத்து, கத்தும்
- கூவுவான்,  சுழலும்  -   சுழல்கின்ற,  வெம் - வெப்பம்பொருந்திய,
கண்ணவாய    -    கண்களையுடையதாகிய,     வெருவையாய்   -
கோட்டானாகி,  சுழல  -  சூழ,  ஓடும்  -  ஓடுவான்,  மழையென -
மேகமானது  மழையைச்  சொரிவதுபோல, துறுகல் - பெரிய கற்களை,
பெய்யா - சொரிந்து,  மலை -  பர்வதத்தை,  எடுத்து - தூக்கி, இட -
இவர்பேரில் போடும்படியாக, வந்தெய்தும் - வந்தடைவான், உழையவர்
- பக்கத்திலிராநின்ற    தனது   ஏவலாளர்   யாவரும்,   நடுங்க  -
பயப்படும்படியாக,     எல்லா     வூனமும்     -     மிதமில்லாத
பொல்லாங்குகளெல்லாம்,  ஒருங்கு  -   ஒரு தன்மையாக, செய்யும் -
செய்யாநின்றவனானான், எ-று.                              (14)

 155. இனையன பலவுஞ் செய்ய விறைவனு மிவையெ லாமென்      வினையின பயன்க ளென்றே வெகுண்டிலன் வினைகண மேலே
     நினைவினை நிறுத்தி நின்றா னீசனு நீங்கிப் போகித்
     தனதிடங் குறுகி யாருஞ் சலித்தெழும் படியிற் சொன்னான்.

     (இ-ள்.) இனையன - இத்தன்மையனவாகிய, பலவும் - அநேகம்
உபசருக்கங்களையும்,  செய்ய  -  அவன்  செய்யவும்,  இறைவனும் -
சஞ்சயந்த  முனிவனும்,  இவையெலாம்  -  இவைகளெல்லாம், என் -
என்னுடைய,   வினையின   -   கருமங்களினது,   பயன்களென்று -
பலனாகுமென்று,    வெகுண்டிலன்    -     (அவ்வித்துத்தந்தனைக்)
கோபிக்காதவனாகி,  வினைகள்மேலே  -  தனது கருமங்களின்மேலே,
நினைவினை  -  தியானத்தை,  நிறுத்தி  -  ஸ்தாபித்து,  நின்றான் -
யோகத்தில்  நின்றான்,நீசனும் - நீசத்தன்மையனான வித்துத் தந்தனும்,
நீங்கிப்போகி  -  அவரைவிட்டு  நீங்கிப்போய்,  தனதிடம்  -  தனது
நகரத்தை,  குறுகி -  அடைந்து,  யாரும்  -  எவர்களும்,  சலித்து -
சலனத்தை  அடைந்து,  எழும்படி  -  தன்னுடன்கூட  வரும்படியாக,
சொன்னான்    -   (சில    உபாய  வசனங்களைச்   சொல்லினான்,
எ-று. ஏ - அசை.                                        (15)