சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 75


 

 156. பிலமென்ப் பெரிய வாயன் பிணமலா லொன்றுந் தின்னான்
     மலைபல விழுங்கினாலும் வயிறொன்று நிறைதல் செல்லான்
     பலபகல் பசியின் வாடிப் பதைப்பின்றி யத்தம் பெற்றா
     லலைபல செய்து நம்மை விழுங்கவந் தரக்க னின்றான்.

     (இ-ள்.)   அரக்கன்   -    ஓர்   இராக்கதன்,   பிலமென -
பர்வதக்குகைபோல,     பெரிய    -     பெரியதாகிய,    வாயன் -
வாயையுடையவன்,  பிணமலால்  - பிரேதங்களேயல்லாமல், ஒன்றும் -
யாதொன்றும்,  தின்னான்  -   தின்னமாட்டான்,  மலைபல  -   பல
பர்வதங்களை,  விழுங்கினாலும்  -  தின்றாலும்,  வயிறு - வயிறானது,
ஒன்றும் -  கொஞ்சமும், நிறைதல்  செல்லான் - நிறையாதவனாவான்,
(அவன்)  பலபகல் -  அநேக நாள்கள், பசியின் - பசியினால், வாடி -
வாட்டமுற்று,  பதைப்பின்றி  - அவசரமில்லாமல், அத்தம் பெற்றால் -
ஸூர்யாஸ்தங்கதமானால்,  அலைபலசெய்து - பலவாகிய வருத்தங்கள்
செய்து, நம்மை -  நம்மெல்லாரையும்,  விழுங்க  - விழுங்கும்படியாக,
வந்து - இவ்விடத்தில் வந்து, நின்றான் - இராநின்றான், எ-று.    (16)

 157. இன்றிரா நம்மை யெல்லாம் பிடித்தவ னடையத் தின்னும்
     இன்றிரா வாரா முன்னே யீண்டுநா மடையக் கூடி
     இன்றிரா வண்ணஞ் செய்யா தொழிதுமே லிழந்தும் வாழ்நாள்
     என்றிடா வெவர்க்குஞ் சொன்னா னெரிநர கத்து வீழ்வான்.

     (இ-ள்.) இன்று - இன்றையதினம், இரா - இராத்திரிக்கு, நம்மை
யெல்லாம் -  நம்மெல்லோரையும்,  பிடித்து  -  கைப்பற்றி, அவன் -
அவ்விராக்ஷதன்,  அடைய  -  ஒருமிக்க,  தின்னும்  -  தின்னுவான்,
(ஆகையால்)  இன்றிரா  -   இன்றைய  விராத்திரி,  வாராமுன்னே -
வருவதற்குள்ளாக,  ஈண்டு  -  இவ்விடத்தில்,  நாம் - நாமனைவரும்,
அடைய  -  ஒருங்காக,  கூடி -  சேர்ந்து,  இன்று - இன்றையதினம்,
இராவண்ணம் -  அவன்  இவ்விடத்தி   லிராதவிதமாக,  செய்யாது -
செய்யாமல்,  ஒழிதுமேல் -  விடுவோமேயானால்,  வாழ்நாள்  - நமது
ஆயுஷ்யநாளை,  இழந்தும்  -  இழந்துவிட்டோம், என்றிடா - என்று,
எவர்க்கும் -  அந்த  நகரத்திலுள்ள  யாவருக்கும்,  எரி -  அக்கினி
போன்ற,   நரகத்து  -   நரகத்திலே ,   வீழ்வான்   - வீழ்வதற்குக்
காரணமான    குரோதமுடைய    வித்துத்தந்தன்,    சொன்னான் -
சொல்லினான், எ-று.                                      (17)

 158. எமக்கிவன் செய்த குற்ற மில்லையென் றிகழ வேண்டாம்
     உமக்குநா னுறுதி சொன்னே னுரைத்ததும் பின்னை மெய்யாஞ்
     சுமக்கலா மலைக ளேந்திச் சொரிந்தவன் றன்னைக கொன்மின்
     எமக்கிவன் செய்த வின்னாப் பின்னையு மறிந்து கொண்மின்.