(இ-ள்.) எமக்கு - எங்களுக்கு, இவன் - இவனால், செய்த -
செய்யப்பட்ட, குற்றம் - தப்பிதம், இல்லையென்று - யாதொன்றுங்
கிடையாதென்று, இகழவேண்டாம் - என் சொல்லை இகழ்ந்து
தள்ளவேண்டாம், உமக்கு - உங்களுக்கு, நான் - நான், உறுதி -
உறுதி வாக்கியத்தை, சொன்னேன் - சொல்லித் தெரிவித்தேன்,
உரைத்ததும் - இவ்வாறு சொன்னதும், பின்னை - பிற்பாடு, மெய்யாம்
- உண்மையாகும், சுமக்கலாம் - தூக்கத்தகுந்த, மலைகள் -
பர்வதங்களை, ஏந்தி - தூக்கி, சொரிந்து - போட்டு, அவன்தன்னை -
அவ்விராக்கதனை, கொன்மின் - கொல்லுங்கள், எமக்கு - எமக்கு,
இவன் - இவ்வரக்கனால், செய்த - செய்யப்பட்ட, இன்னா -
துன்பத்தை, பின்னை - பிற்பாடு, அறிந்துகொண்மின் -
தெரிந்துகொள்ளுங்கள், எ-று.
உம் - அசை. (18)
159. அரக்கனென் றுரைத்த மாற்றஞ் செவிப்புறத் துறலு மஞ்சா
திரைத்தடித் தெழுந்து சென்று செறிதவன் பெருமை காணா
அரக்கனே யிவனென் றஞ்சா வருந்தவ மறிவி லாதார்
வரைத்திர ளேந்திச் சூழ்ந்தார் வானவர் நடுங்கி யிட்டார்.
(இ-ள்.) அரக்கனென்று - இராக்ஷதனென்று, உரைத்த -
சொன்ன, மாற்றம் - வசனம், செவிப்புறத்து - காதினுள், உறலும் -
அடையவும் (அதாவது : கேட்ட மாத்திரத்தில்) செறி - நிறைந்த,தவன்
- தபஸையுடைய முனிவரினது, பெருமை காணா - பெருமையை
உணராதவர்களும், அஞ்சா - எதற்குமஞ்சாமற் செய்யப்படும்,
அருந்தவம் - அருமையாகிய தபஸினது தன்மையை, அறிவிலாதார் -
தெரியாத மூடர்களுமாகிய பல வித்தியாதரர்கள், அஞ்சா - பயந்து,
திரைத்து - கடலலைகளைப்போலத் திரண்டு, அடித்து -
போர்ப்பறைகளை அடித்து முழக்கி, எழுந்து - கிளம்பி, சென்று -
அவ்விடம் போய், இவன் - இவன், அரக்கனேயென்று -
இராக்ஷதனேயென்று, வரைத்திரள் - பர்வதசமூகங்களை, ஏந்தி -
தூக்கிக்கொண்டு, சூழ்ந்தார் - முனிவரனைச் சூழ்ந்துகொண்டார்கள்,
வானவர் - தேவர்களும், நடுங்கியிட்டார் - இதைப்பார்த்துப்
பயந்தார்கள், எ-று. (19)
160. மின்னொடு தொடர்ந்து மேகம் வெடிபட விடித்துத் தோன்றிப்
பெரன்மலை தன்னைச் சூழ்ந்து புயலினைப் பொழிவ தேபோன்
மின்னும்வெள் ளெயிற்றர் மேனிக் கரியவர் வெடிப்ப வார்த்துக்
கன்மழை பொழிய வீரன் கனகமா மலையி னின்றான்.
(இ-ள்.) மின்னொடு - மின்னற் கொடிகளோடு, தொடர்ந்து -
சேர்ந்து, மேகம் - மேகங்கள், வெடிபட - அதிர்ச்சிபடும்படி,இடித்து -
இடிகளையிடித்து, தோன்றி - உண்டாகி, பொன்மலைதன்னை -
மஹாமேருபர்வதத்தை, சூழ்ந்து - |