சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 77


 

சூழ்ந்துகொண்டு,  புயலினை   -   மழையை,   பொழிவதேபோல் -
சொரிவதுபோல்,  மின்னும் - பிரகாசியாநின்ற, வெள் - வெளுப்பாகிய,
எயிற்றர்  - பற்களையுடையவர்களாகிய,   மேனிக்கரியவர்   - கறுப்பு
வர்ணத்தையுடைய வித்தியாதரர்கள்,  வெடிப்ப   -கேட்டோர் செவி
வெடிக்கும்படியாக,   ஆர்த்து    -     சப்தித்து,      கல்மழை -
சிலாவருஷங்களை,  பொழிய -  சொரிய,  வீரன் - வீரபுருஷனாகிய
சஞ்சயந்தமுனி,   கனகமாமலையின்   -   மஹாமேருபர்வதம்போல்,
நின்றான் - சலனமின்றி யோகத்தில் நின்றான், எ-று.           (20)

வேறு.

161.வந்த தானவர் வரையெடுத் தெறியவு மாதவஞ் சலியாதே
  நின்ற தன்மையைப் பொறுக்கலா தான்செய்த வெறுப்பைமா 
                                     தவனோக்கி
  இன்றி வன்செய்த லெண்வினை கழிந்தபின் யாவர்க்கு
                                         மரிதாகும்
  என்று சுக்கிலத் தியானவா ளெடுத்திடர் வினைப் 
                                    பகையுடைக்குற்றான்.

     (இ-ள்.)  வந்த - அவ்வாறு வந்த, தானவர் - வித்தியாதரர்கள்,
வரையெடுத்து -  பர்வதங்களைத்  தூக்கி,   எறியவும்   - போடவும்,
மாதவம் - உத்கிருஷ்டமான   தபஸில்,   சலியாது - சலனமில்லாமல்,
நின்ற - நிலைபெற்றிருந்த, தன்மையை - குணத்தை, பொறுக்கலாதான்
- சகிக்காத   வித்துத்தந்தன்,   செய்த   -   இயற்றிய, வெறுப்பை -
த்வேஷத்தை, மாதவன் - சஞ்சயந்தமுனி, நோக்கி - பார்த்து, இன்று -
இப்பொழுது,   இவன் -   இவன், செய்தல் - செய்வது, எண்வினை -
அஷ்டகருமங்கள்,    கழிந்தபின்  -    நீங்கினபிறகு,  யாவர்க்கும் -
எவர்களுக்கும்,  அரிதாகும்  - இல்லாததாகும், என்று - என்றெண்ணி,
சுக்கிலத் தியானவாள் - சுக்கிலத்தியானமாகிற வாளாயுதத்தை, எடுத்து
- தரித்து, இடர் -   துன்பம்பண்ணும்,   வினைப்பகை  - கர்மமாகிய
சத்துருக்களை,    உடைக்குற்றான்   -  கெடுப்பதற்கு உத்தேசித்துத்
தியானத்தில் பொருந்தினான், எ-று.                         (21)

வேறு.

162. வீரன் மேற்செலும் வெகுளிவெந் தீயினன் விரைந்தே
    மாரி போற்பல மலையெடுத் தெறிந்தன னெறிய
    வீரன் மேற்செலும் வெகுளியை விலக்கிப்பன் னூறு
    வாரஞ் சென்றபின் பமத்தினைப் பறித்தெறிந் திட்டான்.

     (இ-ள்.) வீரன் - வீரபுருஷனாகிய  சஞ்சயந்தமுனியின், மேல் -
மேலே, செலும் -   செல்லப்பட்ட, வெகுளி - கோபமாகிற,   வெம் -
வெப்பம்பொருந்திய,