80மேருமந்தர புராணம்  


 

பேர்கள், வந்து -   சேர்ந்து வந்து, தம்முள் - தங்களுக்குள், ஒன்றி -
மனம் ஒன்றுபட்டு, கயக்கற - சோர்வின்றி, பொருது - தாக்கி, மாய -
இரண்டாவது  ஸமயத்தில் மாய்ந்துவிட, காய்ந்து - கோபித்துத் தாக்கி,
அலி -   நபும்ஸகவேதமும், மாய்ந்த பின்னை - முன்றாஞ் சமயத்தில்
மாய்ந்துபோன  பிறகு,  (நாலாம் ஸமயத்தில்) வியக்க - ஆச்சரியமாக,
வந்து - வந்து,    ஒருத்தி -   ஸ்திரீவேதமென்னும்    கர்மபிரகிருதி,
மெல்லியர் -    அற்ப     குணமுடையவர்களாகிய, அறுவரோடும் -
(தனக்குப் பின்    ஐந்தாம்     சமயத்தில்    கெடும்)    ஹாஸ்யாதி
அறுவர்களுடனே,    வீழ்ந்தாள் -  நாசத்தையடைந்தாள், (அதாவது :
அவள்    நாசத்தையடைய    அவ்வறுவரும்     ஐந்தாம் சமயத்தில்
கெட்டார்கள்.  அவ்வாறு  ஹாஸ்யாதி யறுவர்கள் ஐந்தாம் ஸமயத்தில்
கெட), உயப்பிழைத்து -  அப்போது    நிலைபெறத் தப்பிப்பிழைத்து,
ஒருவன் - புருஷவேதமென்னும்   ஒருவன், நின்றான் -   தங்கினான்,
(அவ்வாறு நின்ற அவன்)    ஒருங்கு -  உடனே (ஆறாம்ஸமயத்தில்),
போர் தொடங்கி -    யுத்தஞ்    செய்யத்  தொடங்கி, மாய்ந்தான் -
கெட்டான், எ-று.

     எட்டுப்பேர் :- அப்பிரத்தியாக்கியான குரோதம், மானம்,மாயம்,
லோபம்,  பிரத்தியாக்கியான   குரோதம்,   மானம், மாயம், லோபம்
என்பனவாம்.

     அறுவர் :- ஹாஸ்யை, ரதி,  அரதி,  சோகம், பயம், ஜுகுப்ச்சை
என்பனவாம்.                                           (26)

 167. கல்மழை கவணிற் பெய்துங் கணைமழை வில்லிற் பெய்தும்
     எல்லையி லிடும்பை செய்த லிறைவன்மே லுறாமை நோக்கிப்
     புல்லியர் பொறாது நால்வர் போர்முறை மூவர் வீழ்ந்தார்
     மெல்லியா னொருவன் வீழ்ந்து கிடந்துபின் மாய்ந்து போனான்.

     (இ-ள்.) கல்மழை -  சிலா வருஷங்களை, கவணில் - கல்லெறி
கயிற்றினால்,  பெய்தும்   - சொரிந்தும்,    கணைமழை   -  அம்பு
வருஷங்களை,   வில்லில்   - வில்லினால்,  பெய்தும் - சொரிந்தும்,
எல்லையில் - அளவில்லாத,  இடும்பை -  துன்பங்களை, செய்தல் -
செய்வது,    இறைவன்மேல்     -    முனியின் பேரில், உறாமை -
அடையாமையை, நோக்கி -   பார்த்து,   புல்லியர் - அற்பர்களாகிய,
நால்வர் -    ஸஞ்சுவலன    குரோத   மான மாயா லோபமென்னும்
நால்வர்களில்,   பொறாது - சகிக்காமல், மூவர் - ஸஞ்சுவலன குரோத
மான மாயா என்ற மூவர்களும், போர் - யுத்தத்தில், முறை - கிரமமாக
(ஏழாஞ் சமயத்தில்   ஸஞ்சுவலன குரோதமும், எட்டாஞ்   சமயத்தில்
ஸஞ்சுவலன     மானமும்,    ஒன்பதாவது  ஸமயத்தில் ஸஞ்சுவலன
மாயையும்),      வீழ்ந்தார் -     நாசமடைந்தார்கள்,       (இந்த
அநிவிருத்திகுணஸ்தானத்தில் இவ்விதமாக முப்பத்தாறு கர்மங்கள்கெட)
மெல்லியான் -    மிருதுவாகிய     தன்மையையுடைய,   ஒருவன் -
ஸஞ்சுவலன லோப மென்னுமொருவன், வீழ்ந்துகிடந்து - தங்கியிருந்து,
பின் -    பிற்பாடு,   (ஸூக்ஷ்ம ஸாம்பராயகுணஸ்தானத்தின் அந்திய
ஸமயத்திலே)   மாய்ந்து    போனான் -   அவனும் நாசமடைந்தான்,
எ-று.                                                  (27)