சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 81


 

வேறு.

 168. விளங்கு வாளெயி றிலங்கநக் குருமெனத் தெழியாப்
     புளங்கொள் கார்முகி லெனவிழி யாப்பொடித் தெழுந்தான்
     துளங்கு சுக்கிலத் தியானவா டுளக்கறப் பிடியாக்
     களங்கொள் சிந்தையன் பசலைநித் திரைகளைக் கடிந்தான்.

     (இ-ள்.) விளங்கு - விளங்குகின்ற, வாள் - ஒளிபெற்ற, எயிறு -
பற்கள்,   இலங்க -   பிரகாசிக்க,   நக்கு  - நகைத்து, உருமுஎன -
இடியைப்போல,     தெழியா     -      கர்ஜித்து,   புளங்கொள் -
வேகத்தைக்கொண்ட,    கார் -   கறுத்த, முகிலென - மேகம்போல,
விழியா - கண்ணைவிழித்து, பொடித்து - மயிர் சிலிர்த்து, எழுந்தான் -
(வித்துத்தந்தன்) உபத்திரவஞ்செய்ய எழுந்தான், (அப்போது) துளங்கும்
- பிரகாசியாநின்ற,      சுக்கிலத்தியானவாள்     -   இரண்டாவது
சுக்கிலத்தியானமாகிய     ஏகத்துவ        விதர்க்க விசாரமென்னும்
வாளாயுதத்தை, துளக்கற -சலனமின்றி, பிடியா - பிடித்து, களங்கொள்
- மனதிடமாகக்கொண்ட,     சிந்தையன்     -  தியானத்தையுடைய
சஞ்சயந்தமுனி, (க்ஷீணகஷாய    குணஸ்தானத்தின்    அந்தியத்தில்
இரண்டுஸமயத்தின்    முதல் ஸமயத்திலே)  பசலை நித்திரைகளை -
ப்ரசலை நித்திரையென்னுமிரண்டு  கருமப்பிரகிருதிகளை, கடிந்தான் -
விலக்கினான், எ-று.                                      (28)

 169. கணங் கடந்தபின் கண்மிசை நால்வரைக் காணாப்
     பிணங்கு மெல்லையு ளறிவினைச் செறிவுறுத் தைவர்
     இணங்கி வந்தைவ ரிடையுறு மவரொடு மெதிர்ந்தார்
     மணந்து மற்றவ்வீ ரெழுவருங் கணத்திலே மடிந்தார்.

     (இ-ள்.)    கணங்கடந்தபின்   - முதல்  ஸமயம் நீங்கினபிறகு,
கண்மிசை நால்வரை -  தரிசனாவரணீயமென்னும் நால்வரை, காணா -
பார்த்து, பிணங்குமெல்லையுள் -  அவர்களுடன் போராடுங்காலத்தில்,
அறிவினைச்  செறிவுறுத்தும் -   ஞானத்தைத் தடைசெய்யும், ஐவர் -
ஞானாவரணீயமாகிய   ஐவரும், இணங்கி வந்து - சேர்ந்துவந்து, ஐவர்
இடையுறும்   அவரொடும் -   அந்தராயமென்கிற   ஐவருடனே கூடி,
எதிர்த்தார் -   எதிர்ந்தார்கள்,   மணந்து - அப்படிச்சேர்ந்து, அவ்வீ
ரெழுவரும் -    அந்தப்பதினாலு    பிரகிருதிகளும்,   கணத்திலே -
க்ஷீணகஷாய     குணஸ்தானத்தின் அந்திய சமயத்திலே, மடிந்தார் -
நாசமானார்கள், எ-று.

இவ்விடத்தில்          தரிசனாவரணீயம்          நான்காவன :-
சக்ஷுதரிசனாவரணீயம்,      அசக்ஷுதரிசனாவரணீயம்,       அவதி
தரிசனாவரணீயம், கேவலதரிசனாவரணீயம் என்பனவாம்.

ஞானாவரணீயம் ஐந்தாவன :-    மதிஞானாவரணீயம்,       ஸ்ரீத
ஞானாவரணீயம், அவதிஞானாவரணீயம், மனப்பரிய ஞானாவரணீயம்,
கேவல ஞானாவரணீயம் என்பனவாம்.