பேரின்பத்து - பெரியதாகிய அனந்த ஸௌக்கியத்தில், உறைதி - நீ
தங்கியிருப்பாயாக, உன்னை - உன்னை, நீ - நீ, உன்னுள்ளே -
உன்னுக்குள்ளே, அனுபவித்து - அனுபவித்து, உலகம் -
இம்மூவுலகத்துக்கும், உத்தமன் - மேலானவன், நீயே - நீயேயாகும்,
எ-று. (36)
வேறு.
177.செறிந்த மாதவன் றிருவடித் தலத்திலிப் படிச்சில துதிசொன்னார்
எறிந்த காதியி னெண்குண னாயின னெய்தின னுலகுச்சி
பறந்து வந்துநற் பழுமரப் பறவையின் பன்னகர் முதலானோர்
நிறங்கொள் மாமலர் சொரிந்தன ரேத்தினர் வேர்த்தன வினையெல்லாம்.
(இ-ள்.) செறிந்த - சேர்ந்திராநின்ற, மாதவன் -
மஹாதபஸையுடைய சஞ்சயந்த பட்டாரகரது, திரு - அழகிய,
அடித்தலத்து - பாதமூலத்தில், இப்படி - இந்தப் பிரகாரம், சில -
சிலவாகிய, துதி - ஸ்தோத்திரங்களை, சொன்னார் - அவர்கள்
சொன்னார்கள், (அப்போது) எறிந்த அகாதியின் - அகாதி
கர்மங்களைக்கெடுத்ததினால், எண்குணனாயினன் - அஷ்டகுணங்களை
யுடையவனாய், உலகுச்சி - உலகுச்சியாகிய ஸித்தி க்ஷேத்திரத்தை,
எய்தினன் - அவன் அடைந்தான், பன்னகர் முதலானோர் -
பவணலோக முதலாகிய மூவுலகத்துள்ள தேவர்களும், நல் -
நன்மையாகிய, பழுமரம் - பழங்களையுடைய மரத்தில், பறவையின் -
பட்சிகள்வந்து சேர்வதுபோல், பறந்துவந்து - வேகமாகவந்து,
நிறங்கொள் - நல்ல நிறத்தைக்கொண்ட, மாமலர் - சிறந்த
புஷ்பங்களை, சொரிந்தனர் - பொழிந்தவர்களாய், ஏத்தினர் -
ஸ்துதித்தார்கள், வினையெல்லாம் - அவர்களுடைய
கருமங்களெல்லாம், வேர்த்தன - வேர்த்துப்போயின, (அதாவது :
நிலைதளர்ந்தன), எ-று. (27)
வேறு.
178. அமிர்தினு நஞ்சு கண்ணுக் கழகிதென் றுண்ட வன்போல்
திமிரமாம் வினையை நீக்கிச் சித்திசெய் தவத்திற் காக்கும்
அமரன துருவங் கொண்ட முனிவனாங் குமரன் றானும்
தமரென மகிழ்ந்து நெஞ்சிற் சாலவும் பணிந்து நின்றான்.
(இ-ள்.) அமிர்தினும் - அமிர்தத்தைப் பார்க்கினும், நஞ்சு -
விஷமானது, கண்ணுக்கு - நேத்திரத்தினது பார்வைக்கு, அழகிதென்று
- அழகாயிருக்கிறதென்று, உண்டவன்போல் - அதனைப்
புசித்தவன்போன்று, திமிரமாம்- மித்தியாத்துவ அந்தகாரத்தினாலாகிய,
வினையை - கருமங்களை, நீக்கி - விலக்கி, சித்தி - ஸித்தியை, செய்
- செய்யும்படியான, தவத்திற்கு - தபத்திற்கு, ஆக்கும் - |