(தெளிவில்லாத தன்மை பெற்று அதாவது : மித்தியாத்துவமடைந்து,
சம்சாரத்தை) ஆக்கும்படியான, அமரனது - பவணதேவனாகிய
தரணேந்திரனது, உருவங்கொண்ட - ரூபத்தைக்கொண்ட, முனிவனாம்
- பூர்வம் சயந்தமுனியாகிய, குமரன்றானும் - இளையனாகிய
தரணேந்திரனும், தமரென - இச்சஞ்சயந்த பட்டாரகர் தனது
பந்துவென்று, நெஞ்சில் - மனதில், மகிழ்ந்து - சந்தோக்ஷித்து, சாலவும்
- மிகவும், பணிந்து - வணங்கி, நின்றான் - நின்றனன், எ-று. (38)
179. வில்லொடு கணைகள் வேல்கோல் விட்டெறி பிண்டி பாலம்
கல்லொடு மரமும் வாவி திடர்படக் கிடந்த காணா
வெல்லைசெய் தவதி யாற்பார்த் திவன்செய லோவீ தென்னாப்
பல்லவர் நடுங்க வோடிப் பாதத்தா லுதைப்ப வீழ்ந்தான்.
(இ-ள்.) வில்லொடு - விற்களோடு, கணைகள் - அம்புகளும்,
வேல் - வேல்களும், விட்டெறிகோல் - கைவிட்டெறியும் கோல்களும்,
பிண்டிபாலம் - பிண்டிபாலம் என்கிற ஆயுதங்களும், கல்லொடு -
கற்களோடு, மரமும் - மரங்களும், வாவி - அத்தடாகமாகிய
க்ஷேத்திரத்தில், திடர்பட - மேடுபட,கிடந்த - கிடந்தவற்றை, காணா -
கண்டு, எல்லை செய்து - அளவுசெய்து, அவதியால் - அவதி
ஞானத்தினால், பார்த்து - தெரிந்து, இவன் - இவ்வித்துத்தந்தனது,
செயலோ - செய்கையோ, ஈது - இது, என்னா - என்று, பல்லவர் -
பலரும், நடுங்க - பயப்படும்படியாக, ஓடி - வேகமாகச் சென்று,
பாதத்தால் - தனது காலினால், உதைப்ப - உதைக்க, வீழ்ந்தான் -
வித்துத்தந்தன் பூமியில் விழுந்தான், எ-று. (39)
180. மேகபா சத்திற் றோன்று மின்னன தந்தத் தானைப்
போகபா சத்தின் வந்து பொருந்திய சுற்றத் தோடும்
நாகபா சத்திற் கட்டா நடுக்கட லிடுவ னென்னச்
சோகபா சத்தி னாவா யுடைந்தவர் துயர முற்றார்.
(இ-ள்.) மேகபாசத்தில் - மேகக்கூட்டத்திலே, தோன்றும் -
தோன்றுகின்ற, மின்னன - மின்னல்போன்ற, தந்தத்தானை -
பற்களையுடைய வித்துத்தந்தனை, போகபாசத்தில் -
போகவாஞ்சையால், வந்து - கூடவந்து, பொருந்திய - சேர்ந்த,
சுற்றத்தோடு - பந்துக்களோடு, நாகபாசத்தில் - நாகபாசத்தினாலே,
கட்டா - கட்டி, நடுக்கடல் - ஸமுத்திர நடுவிலே, இடுவன் -
போடுவேன், என்ன - என்று சொல்ல, சோகபாசத்தில் - துக்க
ஸமூகத்தால், நாவாயுடைந்தவர் - (கடலிலே) கப்பலுடை பட்டவர்களது,
துயரம் - துக்கத்தை (அதாவது : கடல் நடுவில் கப்பலுடைபட்டவர்
அடைந்த துன்பத்தைப்போன்ற துன்பத்தை), உற்றார் -
(வித்தியாதரர்கள்) பொருந்தினார்கள், எ-று. (40)
181. தரணன்றன் கோபங் காணாத் தானவர் தலைவ ரெல்லாம்
மரணமின் றெய்திற் றொன்னா மயங்கிய மனத்த ராகிச் |