சரணமுன் சரண மென்னாச் சார்ந்தனர் பலருஞ் சோர்ந்தார்
கரணந்தம் புலங்கள் காணார் கைதொழு திறைஞ்சி மாதோ.
(இ-ள்.) தரணன்றன் - தரணேந்திரனது, கோபம் - கோபத்தை,
காணா - பார்த்து, தானவர் - வித்தியாதரர்களில், தலைவர் எல்லாம் -
தலைமை பெற்றவர்களெல்லாம், இன்று - இப்போது, மரணம் -
மரணமானது, எய்திற்று - வந்தது, என்னா - என்று, மயங்கிய -
பிரமித்த, மனத்தராகி - மனதுடையவர்களாகி, கரணம் -
(தப்பித்துக்கொள்ளும்) செய்கையை, தம் - தங்களுடைய, புலங்கள் -
விஷயங்களில், காணார் - (வேறொருவகையிலும்) அறியாதவர்களாகி,
கைதொழுது - கைகூப்பி, இறைஞ்சி, வணங்கி, உன் சரணம் - (வாராய்
தரணேந்திரனே) உனது பாதம், சரணம் - (எங்களுக்கு) ரக்ஷணை,
என்னா - என்று சார்ந்தனர் - அடைக்கலமானார்கள், பலரும் -
அவர்களைச் சேர்ந்த வேறு பல பேர்களும், சோர்ந்தார் -
சோர்வுற்றார்கள், எ-று. (41)
182. மின்னொத்த தந்தத் திந்தப் பாவிதான் விதேயத் தின்று
முன்னைத்தன் பாவத் தாலே முனிவனைக் கொண்டு வந்து
கன்மொய்த்த திணிதிண் டோளாய் கயத்திடை யிட்டு நம்மைத்
தின்னத்தா னரக்கன் வந்தா னின்றெனச் செப்ப லோடும்.
(இ-ள்.) மின்னொத்த - மின்னலைப்போன்ற, தந்தத்து -
பற்களையுடைய, இந்தப்பாவிதான் - இந்தப் பாபிஷ்டனாகியவன்,
முன்னை - பூர்வத்தில் செய்யப்பட்ட, தன் - தன்னுடைய, பாவத்தாலே
- பாபகருமோதயத்தாலே, இன்று - இப்போது, விதேயத்து - விதேஹ
க்ஷேத்திரத்தினின்றும், முனிவனை - இச் சஞ்சயந்த பட்டாரகரை,
கொண்டுவந்து - தனது விமானத்தில் தூக்கிக் கொண்டு வந்து,
கண்மொய்த்த - கல்லைப்போன்ற, திணி - கெட்டியாகிய, திண்
தோளாய் - வலிமைபெற்ற புயத்தை யுடையவராகிய தரணேந்திரரே,
கயத்திடை - இந்தத் தடாகத்தினிடத்திலே, இட்டு - தள்ளிவிட்டு,
நம்மை - நம்மெல்லாரையும், தின்னத்தான் - தின்னும்படியாக,
அரக்கன் - ஓரிராக்கதன், இன்று - இப்பொழுது, வந்தான் -
இவ்விடத்தில் வந்திருக்கிறான், என - என்று, செப்பலோடும் - அவன்
சொல்லவும், எ-று. (42)
183. அறிவிலான் சொல்லை மெய்யென் றஞ்சினோ மடையக் கூடி
மறுவிலான் றவத்தின் றன்மைப் பயத்தைநா மதிக்க மாட்டாச்
சிறியர்யாஞ் செய்த தீமை பெரியைநீ பொறுக்கல் வேண்டு
மிறைவனே யெடுத்துக் காட்டா மென்றவர் பணிந்து நின்றார்.
(இ-ள்.) அறிவிலான் - புத்தியில்லாதவனுடைய, சொல்லை -
வசனத்தை, மெய்யென்று - உண்மைதானென்று, அஞ்சினோம் -
பயந்தவர்களாகி, அடைய - |