92மேருமந்தர புராணம்  


 

மாட்சிமையுடைய,சிறப்பு  - ஜன்மாபிஷேக கல்யாணத்தை, அமர்ந்தாய்
- (தேவர்களால் செய்யப்)  பொருந்தினாய்,  நீ - நீ,   மந்தரத்தின் -
மஹம்மேரு  பர்வதத்தில்,  மாண்ட - மாட்சிமையையுடைய, சிறப்பு -
ஜன்மாபிஷேகத்தை,    அமர்ந்து   -  பொருந்தி,   மண்ணுலகத்து -
இந்தப்பூமியில், அந்தரத்தை - தீமைகளை, நீக்கும் - போக்கும், அரசு
- இராஜ்ஜியத்தையும், அளித்தாய் - செய்தருளினாய், எ-று.      (50)

 191. ஆதியோ டந்தமிலா முத்திக் கிளவரசாய்
     மாதவனாய் மண்ணின் மிசையமர்ந்தாய் நீயே
     மாதவனாய் மண்ணின் மிசையமர்ந்தோய் வான்புகழே
     யோதிய மூவுலகு மேத்தாவா றுண்டோ.

     (இ-ள்.) ஆதியோடு - முதலோடு, அந்தமிலா - முடிவுமில்லாத,
முத்திக்கு   -    மோட்சத்திற்கு,      இளவரசாய்   -     யுவராஜ
பதவியுடையவனாய்,      நீ    -   நீ,      மாதவனாய்   - மஹா
தபஸையுடையவனாக, மண்ணின்மிசை - பூமியின்பேரிலும், அமர்ந்தாய்
- பொருந்தினாய்,    மாதவனாய்  -    மஹா தபஸையுடையவனாகி,
மண்ணின்மிசை   -    இப்பூமியில்,    அமர்ந்தோய்  - பொருந்திய
ஸ்வாமியே!, வான்புகழ் - உனது பெரிதாகிய புகழ்ச்சியே, மூவுலகும் -
மூன்றுலோகமும்,   ஓதிய - சொல்லியன, (ஆகையால்) ஏத்தாவாறு -
உன்னை ஸ்துதிக்காதவகை, உண்டோ - உளதோ? (இல்லை என்றபடி),
எ-று.                                                  (51)

வேறு

 192. பாடினார் பறவை யெல்லாந் தரையின்மேல் வீழ்ந்தமண்மே
     லோடுவார் தாங்க ளெல்லா மொருங்குநின் றுவந்து கேட்டார்
     பீடினா லிறைவ னின்றான் பிறங்குதார் நிறங்கொள் சென்னி
     யாடுமா னாக ராச னவதியா லதனைக் கண்டான்.

     (இ-ள்.)    பாடினார்  - (மேற்சொன்ன வகையான ஸ்துதிகளை
விநமி,   நமி  குமாரர்கள் சங்கீதங்களாகப்) பாடினார்கள், (அப்போது)
பறவையெல்லாம் - பட்சிகளெல்லாம், (அச்சங்கீதத்தால்) தரையின்மேல்
- இப்பூமியின்மேல்,  வீழ்ந்த  - வீழ்ந்தன, மண்மேல் - பூமியின்மேல்,
ஓடுவார்   தாங்களெல்லாம்  -  செல்லப்பட்டவர்களெல்லாம், ஒருங்கு
நின்று   - ஒன்றுசேர்ந்து நின்று, உவந்து - சந்தோஷித்து, கேட்டார் -
கேட்டார்கள்,பீடினால் - (யோகத்திற் றளர்வின்றிப்) பெருமையினாலே,
இறைவன்    - ஸ்வாமியான   தலைவன்,   நின்றான்  - சலனமின்றி
இருந்தான்,   அதனை - அந்த விதத்தை, பிறங்குதார் - விளங்குகின்ற
மாலையை  யணிந்த,  நிறங்கொள்  -   பிரகாசங்கொண்ட, சென்னி -
மகுடத்தில், ஆடு - படமெடுத்தாடுகின்ற, மால் - பெரிய, நாகராஜன் -
ஸர்ப்பராஜனாகிய  தரணேந்திரன், அவதியால் - அவதிஞ்ஞானத்தால்,
கண்டான் - அறிந்தான், எ-று.                              (52)