193. கண்டவன் கலைக ளெல்லாங் கடந்துப சாந்தி சென்ற
பண்டித னொருவ னாகிப் பாதம்வாய் கைமு கத்தாற்
புண்டரீ கத்தை வென்று புலமையை நடிப்பான் போலக்
கொண்டதோர் வேடந் தன்னா லிறைவனைக் குறுக வந்தான்.
(இ-ள்.) கண்டவன் - அவ்விதமறிந்த தரணேந்திரன்,
கலைகளெல்லாம் - கலைஞானங்களையெல்லாம், கடந்து - கரைகண்டு,
உபசாந்திசென்ற - சாந்த பரிணாமமடைந்த, பண்டிதனொருவனாகி -
ஒரு வித்துவானுக்குச் சமானமாகி, பாதம் - பாதத்தினாலும், வாய் -
வாயினாலும், கை - கைகளாலும், முகத்தால் - முகத்தினாலும்,
புண்டரீகத்தை - தாமரை மலரை, வென்று - ஜெயித்து, புலமையை -
வித்வத்திறத்தை, நடிப்பான் போல - அபிநயத்தால் காட்டுவான்போல,
கொண்டது - தன்னால் நிர்மித்துக் கொள்ளப்பட்டதாகிய, ஓர் -
ஒப்பற்ற, வேடந்தன்னால் - ரூபத்தால் (அதாவது : ரூபத்தோடு),
இறைவனை - தலைவனை, குறுக - அடைய (சமீபத்தில்), வந்தான் -
வந்து சேர்ந்தான், எ-று. (53)
194. வந்தவன் மைந்தர் செய்கை வடிவுகண் டுவந்து வானிற்
சுந்தர மலர்க டூவி யிறைவனை வணங்கிச் சொன்னா
னிந்திரர்க் கிறைவன் செந்தா மரையடிக் கிசைவி லாத
வந்தரம் பலவுஞ் செய்தீ ரறிவிலீர் போக வென்றான்.
(இ-ள்.) வந்தவன் - அவ்வாறு வந்த தரணேந்திரன், மைந்தர் -
இக் குமாரர்களுடைய, செய்கை - செய்கையையும், வடிவு -
ரூபத்தையும், கண்டு - பார்த்து, உவந்து - சந்தோஷித்து, வானில் -
ஆகாயத்தினின்றும், சுந்தரம் - அழகிய, மலர்கள் - புஷ்பங்களை,
தூவி - இறைவன்மேற் சொரிந்து, இறைவனை - ஸ்வாமியை, வணங்கி
- நமஸ்கரித்து, சொன்னான் - சொல்லினான், (என்னவென்றால்),
இந்திரர்க்கு - தேவேந்திரர் முதலானவர்களுக்கெல்லாம், இறைவன் -
நாதனாகிய ஸ்வாமியினது, செம் - சிவந்த, தாமரை -
தாமரைப்பூப்போன்ற, அடிக்கு - பாதங்களுக்கு, இசைவிலாத -
பொருந்தாத, அந்தரம் பலவும் - பல விக்கினங்களையும், செய்தீர் -
உண்டுபண்ணினீர்கள், அறிவிலீர் - புத்தியில்லாதவர்களே!, போக -
இவ்விடம் விட்டு நீங்கிப் போகக்கடவீராக, என்றான் - என்று
சொல்லினான், எ-று. (54)
195. என்றலுங் குமரர் சொன்னா ரிறைவன்றன் பெருமை யாமே
யொன்றிமற் றறிது நீர்போ முங்கரு மத்து மேலே
யன்றெனி லறிவி லாமை யும்மைவந் தடையு மென்றார்க்
கின்றுநீ ரிறைவன் றன்னை யிரக்கின்ற தென்கொ லென்றான். |