94மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.) என்றலும்  -  என்று  சொன்னமாத்திரத்தில், குமரர் -
குமாரர்கள்,   சொன்னார்  -    சொன்னார்கள்,     (எப்படியெனில்)
இறைவன்றன்   -    நாதனது, பெருமை - மஹாத்மியத்தை, யாமே -
நாங்களே, ஒன்றி - பொருந்தி,அறிதும் - தெரிந்திருக்கின்றோம், நீர் -
நீர், உங்கருமத்து மேலே - உம்முடைய காரியத்தின் பேரில், போம் -
போவீராக,   அன்றெனில்   -     அல்லாவிட்டால், அறிவிலாமை -
மூடத்தனமானது, உம்மை - உம்மிடத்தில், வந்தடையும் - வந்துசேரும்,
என்றார்க்கு   -    என்று    சொல்லிய  குமாரர்களிடத்து, இன்று -
இப்பொழுது,   நீர்   -     நீங்கள், இறைவன்தன்னை - பகவானை,
இரக்கின்றது - யாசிக்கின்றது, என்கொல் - என்ன?, என்றான் - என்று
தரணன் கேட்டான், எ-று.                                 (55)

196. அரசராய்ச் சிலரை நாட்டி யரும்பொரு ளீந்து மண்ணை
    விரகினாற் கண்டஞ் செய்து வேண்டுவார்க் கீந்து போந்தா
    னரசரே நாங்களெங்க ளவனிக்கு வந்தோ மென்ன
    வுரைசெய்த பொருளிங் குண்டோ வுறுவனா யிறைவ னின்றால்.

     (இ-ள்.)  அரசராய்  - இராஜாக்களாக, சிலரை - சிலபேர்களை,
நாட்டி   -    ஸ்தாபித்து,    அரும்    -    அரிதாகிய, பொருள் -
திரவியங்களையும்,   ஈந்து - (அவர்களுக்குக்) கொடுத்து, மண்ணை -
பூமியை,   விரகினால்  - கிரமத்தால், கண்டஞ்செய்து - பங்கு செய்து,
வேண்டுவார்க்கு   -   வேண்டினவர்களுக்கு,   ஈந்து   - கொடுத்து,
போந்தான் -    இவ்விடம்    வந்து  தபஞ்செய்கின்றான், நாங்கள் -
நாங்களும்,   அரசரே - இராஜ குமாரர்களே, (ஆகையால்) எங்கள் -
எங்கள்   ஸம்பந்தமாகிய,   அவனிக்கு   - பூமி இராஜ்ஜியத்துக்காக,
வந்தோம் - இவரிடம் வந்தோம், என்ன - என்று குமாரர்கள் சொல்ல,
(தரணன்)  உறுவனாய் - முனிவனாய், இறைவன் - நாதன், நின்றால் -
தபஸில்  நின்றால், உரைசெய்த - உங்களால் சொல்லப்பட்ட, பொருள்
- பொருள்களானவை,     இங்கு    -  இவ்விடத்தில்,   உண்டோ -
இருக்கின்றனவோ? (இல்லை என்று சொன்னான்), எ-று.        (56)

197. உலகமூன் றுடைய கோமாற் கொன்றுமற் றில்லை யென்றீர்
    பலமருந் துண்டு தீராப் பழம்பித்தர் நீவி ரென்ன
    நிலமெலாம் பரதனாட்சி யவனுழைச் செல்லு மென்றா
    னுலகினுக் குறுதி சொல்ல வும்மையோ விடுத்த தென்றார்.

     (இ-ள்.) உலகமூன்றுடைய  -  மூன்றுலகும் ஆட்சியாகவுடைய,
கோமாற்கு  -  கோமானாகிய  ஸ்வாமிக்கு,  ஒன்றும் - யாதொன்றும்,
இல்லையென்றீர்  -   கிடையாதென்று   சொன்னீர், பலமருந்து - பல
ஒளஷதங்களை,   உண்டு - தின்றும், தீரா - நீங்காத, பழம் - பழைய,
பித்தர்   -   பைத்தியத்தையுடையவர், நீவிர் - நீரே, என்ன - என்று
குமாரர்கள்  சொல்லவும்,    நிலமெலாம்    - பூமிமுழுதும், பரதன் -
பரதராஜ