சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 99


 

207. உனக்கிவன் றமைய னாய பிறப்புநீ யறிந்த தொன்றே
    உனக்குமு னிவனு மாய பிறப்பெண்ணி லுரைக்க லாற்றா
    வினைக்குவித் தீட்ட வேண்டா வெகுளியைப் பெருக்கி மெய்ம்மை
    நினைத்திடிற் சுற்ற மன்றி நின்றவ ரில்லை கண்டாய்.

     (இ-ள்.)  (அதைக்கேட்டு)    உனக்கு   - உனக்கு,   இவன் -
இச்சஞ்சயந்தன்  -  தமையனாய  - அண்ணனாகிய, பிறப்பு ஒன்றே -
இவ்வொரு   பிறப்பே,   நீ - நீ,  அறிந்தது  - தெரிந்தது, உனக்கு -
உன்றனக்கு,  முன் -  முன்னே, இவனும் - இச்சஞ்சயந்தனும், ஆய -
உண்டாகிய,   பிறப்பு  - பிறப்புக்களை, எண்ணில் - இத்தனையென்று
எண்ணினால்,  உரைக்கல்   -    வசனத்தினாற் சொல்வது, ஆற்றா -
முடியாது,     (அதாவது :   அனந்தமாயிராநின்றன;    ஆகையால்),
வெகுளியை   -  கோபத்தை, பெருக்கி - விருத்தியாக்கி, வினைக்கு -
கருமங்களுக்கு,   வித்து    -     விதையை,      ஈட்டவேண்டா -
சம்பாதிக்கவேண்டாம்,    மெய்ம்மை   -  (பிறப்பினது) உண்மையை,
நினைத்திடில்  - நினைக்குமிடத்தில், சுற்றமன்றி - பந்துக்களல்லாமல்,
நின்றவர்  -    இருக்கப்பட்டவர்,    இல்லை  -     இவ்வுலகத்தில்
ஒருவருமில்லை, எ-று.

கண்டாய் - அசை.                                      (67)

வேறு.

208. வருதிரை மணலினும் வளியி னாற்றிரள்
     சருகிலை போலவுஞ் சாயை போலவும்
     மருவிய வினைவசம் வருவ தல்லதிங்
     கொருவர்க ணுறவொரு நாளு மில்லையே.

     (இ-ள்.)   திரை   -  சமுத்திரத்தில் (அலைகளினாலே), வரு -
வரப்பட்டிருக்கிற,   மணலினும்  - மணலைப்போலவும், வளியினால் -
காற்றினால்,   திரள்    -  கூடப்பட்ட, சருகிலைபோலவும் - காய்ந்த
இலைபோலவும்,     சாயைபோலவும்     -          தன்நிழலானது
தன்னுடனிற்பதுபோலவும்,   மருவிய - சேர்ந்திராநின்ற, வினைவசம் -
கர்மவசத்தினால்,    வருவதல்லது    - வருவதேயல்லாமல், இங்கு -
இவ்விடத்தில்      (அதாவது : ஸம்ஸாரத்தில்),       ஒருவர்கண் -
ஒருவரிடத்தில்,   உறவு - நிலையான பந்துத்துவமானது, ஒருநாளும் -
ஒரு தினமும், இல்லை - கிடையாது, எ-று.                   (68)

209. மின்னினு மிகைநனி தோன்றி வீதலின
    மன்னிய வுயிர்தமின் மருவி லாதன
    முன்னைமூ வுலகினு ளில்லை யாயினும்
    பின்னிய வுறவிது பெரிது மில்லையே.