|
94
94
1மாயன்
என்நெஞ்சின் உள்ளான்
மற்றும்
எவர்க்கும் அதுவே
காயமும்
சீவனும் தானே
காலும்
எரியும் அவனே
சேயன் அணியன்
எவர்க்கும்
சிந்தைக்கும்
கோசரம் அல்லன்
தூயன் துயக்கன்
மயக்கன்
என்னுடைத்
தோளிணை யானே.
பொ-ரை : ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன்
என் நெஞ்சிலே தங்கியிருக்கிறான்; இது என்ன சேராச்சேர்த்தி? இதனை வேறு எவரேனும் பெற்றார்
உளரோ? எல்லா உடல்களும் எல்லா உயிர்களும் தானேயாவன்; காற்று நெருப்பு முதலான ஐம்பெரும்பூதங்களும்
அவனேயாவன்! தன் முயற்சியால் காண இருப்பார்க்கு அண்மையில் இருப்பவன்; எத்துணைப் பெரிய ஞானமுடையார்க்கும்
சிந்தையால் நினைப்பதற்கும் ஒண்ணாதவன்; யசோதை முதலானவர்கட்குப் பரம்பொருள் என்ற வாசனையும்
இல்லாத தூய எளிமையினையுடையவன்; என்னோடு கலந்தவன் ஆன இறைவன் என் தோள்களில் இருக்கின்றவன்
ஆனான்.
வி-கு :
‘அதுவே’ என்பதன் ஏகாரத்தைப் பிரித்து
‘எவர்க்கும்’ என்பதுடன் கூட்டுக. கோசரம்-ஐம்பொறி மனம் இவற்றிற்கு விஷயமாதல். துயக்கன் -
மனத்திரிவை உண்டுபண்ணுபவன். மயக்கன் - கலந்தவன்.
ஈடு : ஆறாம்
பாட்டு. 2‘எல்லாப்பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன் என் தோளைப் பற்றி
வாழ்கின்றான்’ என்கிறார்.
மாயன் என் நெஞ்சின்
உள்ளான்-ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன் என்னுடைய மனத்தன் ஆயினான். இது என்ன
பெறாப்பேறு? இது என்ன சேராச் சேர்த்தி? மற்றும் யாரேனும் நான் பெற்ற பேறு பெற்றார் உளரோ?
‘நீர் பெற்ற பேறு தான் என்?’ என்னில், இது என்கிறார் மேல்: காயமும் சீவனும்
1.
‘மாயன் என் நெஞ்சினிலுள்ளான்’ என்பதும் பாடம்.
2.
‘காயமும் சீவனும் தானே, என்னுடைத் தோளிணையானே’ என்ற பதங்களை
நோக்கி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|