| உர 
உரிய பத்தியினை நான் 
கொடுக்கிறேன்,’ என்றும், 1‘அவன் அவன் அந்தப் பத்தியோடு அத்தேவர்களை ஆராதனை 
செய்கின்றான்; என்னால் கொடுக்கப்பட்ட பலனையும் அடைகின்றான்,’ என்றும் இறைவன் ஸ்ரீ கீதையில் 
அருளிச்செய்தபடியே, அவ்விரு திறத்தார்களுடைய உயிர்களுக்குள் உயிராய் நின்றனர் என்று கூறலும் 
ஒன்று. இதனால், இறைவன் 2இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் 
நின்று நடத்துகையாலே, அவர்களும் அடைந்தவர்கள் ஆகின்றார்கள்; இவர்களும் பலத்தைக் 
கொடுக்கின்றவர்கள் ஆகின்றார்கள்; இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் பற்றவும் மாட்டார்கள்; 
இவர்கள் பலனைக் கொடுக்கவும் மாட்டார்கள் என்பது விளங்கும். அதாவது, ‘அய்யன் பாழியில் 
ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவர்கட்குப் பலனைக் கொடுக்கும் ஆற்றல் உள்ளதாவது,’ 
என்றபடி. 
(5) 
 6 
        நின்றனர் இருந்தனர் 
கிடந்தனர் திரிந்தனர்நின்றிலர் 
இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
 என்றுமோர் இயல்வினர் 
எனநினைவு அரியவர்
 என்றுமோர் இயல்வொடு 
நின்றஎம் திடரே.
 
 பொ-ரை : 
‘நிற்றல், நில்லாமை; இருத்தல் இராமை; கிடத்தல், கிடவாமை; திரிதல், திரியாமை’ என ஒன்றுக்கு 
ஒன்றுமாறுபட்ட தொழில்களையுடையவர் ஆதலால், எப்பொழுதும் ஒரே தன்மையினையுடையவர் என நினைத்தற்கு 
அரியவர்; அப்படி நினைப்பதற்கு அரியவர் என்னும் தன்மை எப்பொழுதும் மாறுபடாமல் ஒரே நிலையோடு 
கூடியிருக்கின்றவர்; வேதங்களால் பரம்பொருள் இவனே என்று உறுதி செய்யப்பட்ட திடத்தையுடையவர்; 
அவர் என் தலைவர் ஆவர்.
 
 ஈடு : ஆறாம்பாட்டு. 
உலகங்களினுடைய காத்தலும் இறைவனுடைய நினைவின் அதீனம் என்றார் மேல் திருப்பாசுரத்தில்; அவற்றினுடைய 
தொழில் செய்தல் செய்யாமையும் இறைவனுடைய நினைவின் அதீநம் என்கின்றார் இத்திருப்பாசுரத்தில்.
 
 நின்றனர். . .திரிந்திலர் 
- தொழில் செய்தல் தொழில் செய்யாமை என்னும் இவை, நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் 
என்றும்,
 
1. 
ஸ்ரீ கீதை. 7 : 22.
 2. இரா மடம் ஊட்டல் - இரவில் சத்திரங்களில் தங்கியிருக்கும் தம்
 மக்களுக்கு உணவினை ஊட்டுதல்; 
இது தாயரின் செய்கை.
 |