முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
317

அவதர

அவதரிப்பான். ‘ஆயின், எல்லா அவதாரங்களிலும் திவ்விய ஆயுதங்கள் உளவோ?’ எனின், எல்லா அவதாரங்களிலும் உண்டு; அரசர்கள் 1கறுப்பு உடுத்துப் புறப்பட்டால், விரும்புகிற காலத்தில் முகங்காட்டுகைக்காக அந்தரங்கர் மறைந்து திரிவர்; அது போன்று, தோற்றாதேயும் நிற்பர்கள். 2‘கூரார் ஆழி வெண்சங்கேந்தி வாராய்’ என்னும் இவர்களுக்கு அப்படியேயன்றே தோன்றுவது?’ வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங்கைகளில் திவ்விய ஆயுதங்களைத் தரித்தான்,’ என்பார், ‘அம் கையில் கொண்டான்’ என்கிறார். எங்கும் தானாய - தேவர் மனிதர் முதலான வேறுபட்ட சாதிகள்தோறும் தான் வந்து தோன்றினவன். இனி, இதற்கு, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப்போன்று தம்மை ஏற்றுக்கொள்ளுகைக்காக நிறைந்தபடியைச் சொல்லுகிறார்’ என்று கோடலுமாம். நங்கள் நாதனே - நம்மை அடிமை கொள்ளுகையே பிரயோஜனமாகவுடைய தலைவன்.

(9)

87

        நாதன் ஞாலம்கொள், பாதன் என்அம்மான்
        ஓதம் போல்கிளர், வேத நீரனே.

    பொ-ரை :
எல்லார்க்குந் தலைவன், பூமியை அளந்துகொண்ட திருவடிகளையுடையவன், எனக்குத் தலைவன், சமுத்திரம் போன்று கிளர்கின்ற வேதங்களால் பேசப்படும் 3ஆர்ஜவ குணத்தையுடையவன்.

    வி-கு : கிளர்தல் - மேன்மேல் வளர்தல். கிளர்வேதம் - வினைத்தொகை.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘அவன் நீர்மையைப் பேசப் புக்கால் நம்மால் பேசப்போமோ! கடல் கிளர்ந்தாற்போலே வேதமே பேச வேண்டாவோ?’ என்கிறார்.

    நாதன் - எல்லாரையும் நியமிக்கின்றவன். ஞாலம் கொள் பாதன் - வசிஷ்டன் சண்டாளன் என்னும் வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் திருவடிகளைப் பரப்பினவன். என் அம்மான் - 4இம் மேன்மையையும் நீர்மையையும் காட்டி என்னைத் தனக்கே உரிமை

 

1. கறுப்புடுத்துப் புறப்படல் - நகரி சோதனைக்காக மாறுவேடங்கொண்டு
  புறப்படல்.

2. திருவாய். 6. 9 : 1.

3. ஆர்ஜவம் - நேர்மை.

4. ‘இம்மேன்மையையும் நீர்மையையுங் காட்டி’ என்றது, ‘நாதன்’ என்ற
  பதத்தாற்கூறிய மேன்மையையும், ‘ஞாலங்கொள் பாதன்’ என்ற
  தொடர்மொழியாற்கூறிய எளிமையையும் காட்டி என்றபடி.