முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

106

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

‘தகவுடையவனே’ என்று அதனையே நிரூபகமாகச் சொல்லுகிறாள் என்கிறாள்.

    தகவுடையவனே என்னும் - ஐயகோ! 1‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள். இனி, ‘தகவு இல்லை என்றவள் வாயைப் புதைத்தாற்போலே, 2வந்து தோன்றுவதே!’ என்று, அவன் வந்தால் செய்யும் விருப்பத்தைச் செய்கிறாள் எனலுமாம். பின்னும் மிக விரும்பும் - உருவெளிப்பாட்டின் தன்மை இருக்கிறபடி. 3பிரான் என்னும் -‘பெற்ற தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றுவதே! இது என்ன உபகாரந்தான்’ என்கிறாள். எனது அக உயிர்க்கு அமுதே என்னும் - ‘என்னுடைய உள்ளே இருக்கிற ஆத்துமாவுக்கு இனியனானவனே!’ என்கிறாள். இறைவன், நித்தியமான ஆத்துமா அழியாமல் நோக்கும் அமுதமாதலின், ‘அக உயிர்க்கு அமுதே’ என்கிறாள். உள்ளம் உக உருகி நின்று - வடிவம் இல்லாத மனமானது வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப்போகாநின்றது.  உள்ளம் உருகி நின்று தகவுடையவனே என்னும்; பின்னும் மிக விரும்பும்; பிரான் என்னும்; எனது அக உயிர்க்கு அமுதே என்னும்; இவை, இவள் பேசும் பேச்சைக் கொண்டு நாம் அறிந்தவைகள்; உள் ஓடுகிறது, உள் உளே - 4வாசா மகோசரம். இனி, ‘உள் உளே’ என்பதற்கு, மேலும் மேலும் என்று பொருள் கூறுவாருமுளர். அப்பொருளுக்கு, ‘மேலும் மேலும் உருகி நின்று என்னும்’ எனக்கூட்டுக. 

(6)

150

        உள்உள்ஆவி உலர்ந்து உலர்ந்து, என
        வள்ளலே! கண்ணனே! என்னும்;பின்னும்
        வெள்ளநீர்க் கிடந்தாய்! என்னும்; என
        கள்வி தான்பட்ட வஞ்சனையே?

    பொ - ரை : உள்ளே இருக்கிற உயிரானது சருகாக உலர்ந்து, எனக்கு உதவியைச் செய்தவனே! கண்ணனே!’ என்று கூப்பிடுகின்றாள்.

_____________________________________________________________

1. ஆகரம் - கனி; உத்பத்தி ஸ்தானம் என்றபடி.

2. ‘வந்து தோன்றுவதே’ என்றது, உரு வெளிப்பாடு. செய்யும் விருப்பத்தைச் செய்தலாவது,
  பூசும் சாந்தும் புனையும் கண்ணியும் முதலானவற்றைச் சேர்க்கை.

3. பிரான் - உபகாரகன். ‘பிரிவுக்காலத்தில் செய்யும் உபகாரம் ஏன்?’ என்ன, ‘பெற்ற
  தாய்க்கு இடம் வையாமல் வந்து தோன்றியது’ என்கிறாள்.

4. வாசா மகோசரம் - வாக்கிற்கு எட்டாதது. உள்-உள்ளே ஓடுகிறது. உளே - உள்ளேதான்
 
என்பது பொருள்.