முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இக

108

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி - தன் மனத்தில் ஒடுகிறது பிறர் அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது! தான் பட்ட - 1‘கருமை பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே - பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

(7)

151

        வஞ்சனே! என்னும்; கைதொழும்; தன
        நெஞ்சம்வேவ நெடிதுஉயிர்க் கும்;விறற்
        கஞ்சனைவஞ்சனை செய்தீர்! உம்மைத்
        தஞ்சம் என்றுஇவள் பட்டனவே!

    பொ - ரை : ‘வலிமையினையுடைய கம்ஸனை அவன் நினைத்த நினைவு அவனோடே போமாறு கொன்றவரே! இவள், ‘குணங்களாலும் செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே!’ என்கிறாள்; கைகூப்பி வணங்குகிறாள்; தன்னுடைய நெஞ்சமானது வேகும்படி பெருமூச்சு எறிகின்றாள்; ஆதலால், உம்மையே பற்றுக்கோடாக நினைத்து இவள் பட்ட துன்பங்கள் எண்ணில் அடங்கா’ என்றவாறு.

    வி-கு : தன நெஞ்சம்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை செய்தீர் - பெயர். தஞ்சம் - பற்றக்கோடு. பட்டன -பெயர். ‘ஏ’காரம் இரக்கத்தின் கண் வந்தது.

    ஈடு : எட்டாம் பாட்டு. ‘உம்மை அனுபவித்துச் சுகித்திருக்க வைத்தீர் அல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்; உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. சுந். 66 : 10.

2. பகலை இரவாக்கியது, வில்லி பாரதம் பதினாலாம் போர்ச்சருக்கம் செய். 164 - 173
  முடியக்காண்க. ஆயுதம் எடுத்தது, க்ஷ மூன்றாம் போர்ச்சருக்கம், செய். 14-20 முடியக்
  காண்க. அளவுபடை - சிறுபடை; இங்கு, நாயகன். பெரும்படை - நாயகி. கண்ணழகு
  முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.