| இக 
  
    | 
    108 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
இக்கிடை, இவளுக்கு ஒரு 
படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறதுகாணும். என கள்வி - தன் மனத்தில் ஒடுகிறது பிறர் 
அறியாத படி மறைத்துப் பரிமாறக்கூடிய இவள் படும் பாடே இது! தான் பட்ட - 1‘கருமை 
பொருந்திய திருக்கண்களையுடைய சீதையைப் பிரிந்து நான் ஒருபோதும் ஒரு நொடிப்பொழுதும் பிழையேன்,’ 
என்கிற தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே! வஞ்சனையே - பகலை இரவு ஆக்கியும், 
‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  
அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ? 
(7) 
151 
        வஞ்சனே! என்னும்; 
கைதொழும்; தனநெஞ்சம்வேவ நெடிதுஉயிர்க் 
கும்;விறற்
 கஞ்சனைவஞ்சனை செய்தீர்! 
உம்மைத்
 தஞ்சம் என்றுஇவள் 
பட்டனவே!
 
    
பொ - ரை : 
‘வலிமையினையுடைய கம்ஸனை அவன் நினைத்த நினைவு அவனோடே போமாறு கொன்றவரே! இவள், ‘குணங்களாலும் 
செயல்களாலும் என்னை வஞ்சித்தவனே!’ என்கிறாள்; கைகூப்பி வணங்குகிறாள்; தன்னுடைய நெஞ்சமானது 
வேகும்படி பெருமூச்சு எறிகின்றாள்; ஆதலால், உம்மையே பற்றுக்கோடாக நினைத்து இவள் பட்ட துன்பங்கள் 
எண்ணில் அடங்கா’ என்றவாறு. 
    
வி-கு : 
தன நெஞ்சம்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை செய்தீர் - பெயர். தஞ்சம் - பற்றக்கோடு. பட்டன 
-பெயர். ‘ஏ’காரம் இரக்கத்தின் கண் வந்தது. 
    
ஈடு : 
எட்டாம் பாட்டு. 
‘உம்மை அனுபவித்துச் சுகித்திருக்க வைத்தீர் அல்லீர்; கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்; 
உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள். 
_____________________________________________________________ 
1. 
ஸ்ரீராமா. சுந். 66 : 10. 
2. பகலை இரவாக்கியது, 
வில்லி பாரதம் பதினாலாம் போர்ச்சருக்கம் செய். 164 - 173முடியக்காண்க. ஆயுதம் எடுத்தது, 
க்ஷ மூன்றாம் போர்ச்சருக்கம், செய். 14-20 முடியக்
 காண்க. அளவுபடை - சிறுபடை; இங்கு, நாயகன். 
பெரும்படை - நாயகி. கண்ணழகு
 முதலியவற்றையுடையவளாதலின், நாயகியைப் ‘பெரும்படை’ என்றார்.
 |