186
122 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
156
திருஉடம்பு
வான்சுடர்; செந் தாமரைகண் கைகமலம்;
திருஇடமே மார்வம்;
அயன்இடமே கொப்பூழ்;
ஒருவுஇடமும் எந்தை
பெருமாற்கு அரனேஓ!
ஒருவுஇடம் ஒன்றுஇன்றி
என்னுள்கலந் தானுக்கே.
பொ - ரை :
வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப்
போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம்
திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன்
இருக்கும் இடமாகும்.
வி-கு :
வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம். ஒருவுதல்-நீக்குதல். ‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும்
பொருட்டாய் நின்றது. ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது. கலந்தான் - வினையாலணையும் பெயர்.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி,
‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன்தான், என்
உட்ம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்.
திரு உடம்பு வான் சுடர்
- அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார். 2’ஈஸ்வரனுக்கு
விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர், ‘திரு உடம்பு
வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு
_____________________________________________________________
1.
‘என்னாவிசேரம்மானுக்குச்செம்பொன்
திருஉடம்பு’ என்றதிலே நோக்காகத் ‘தம்மோடே’
என்றும், ‘அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தை
பெருமாற்கு அரனேயோ’
என்றதிலே நோக்காகத் ‘தன்னுடம்பை ‘ என்றும், ‘ஒருவிடமொன்றின்றி என்னுள்
கலந்தானுக்கே’ என்றதிலே நோக்காக ‘என்னுடம்பை’ என்றும் தொடங்கி அருளிச்
செய்கிறார்.
2.
பலகாலும்
விக்கிரத்தை வருணிக்கிறபடியை அனுசந்தித்து நம்பிள்ளை ஈடுபடுகிறார்.
‘ஈஸ்வரனுக்கு’ என்று தொடங்கும்
வாக்கியத்தால், ஆப்த தமர். நம்பத் தகுந்தவர்களில்
உயர்ந்தவர்.
|