New Page 1
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 11 |
139 |
பெண்ணல்லன்’ என்கின்ற
இத்தால் 1சஜாதீய விஜாதீய நிஷேதம் செய்தபடி.
காணலும் ஆகான் -ஆண்
பெண் அலி என்னும் இவற்றைக் காண்கிற பிரமாணங்களால் காணப்படாதவன். இத்தால், 2ஏகப்
பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை. உளன் அல்லன் அல்லாதார்க்கு. இல்லை அல்லன், அடியார்கட்கு.
இவற்றை விரிக்கிறார் மேல்: பேணுங்கால் பேணும் உருவாகும் -3‘தேவீ, நீ செய்த
தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானேஉனக்குப் புத்திரனாய்த் தோன்றவில்லையா?’
என்கிறபடியே, ‘நீ செய்த தவங்கள் பயனைப் பெற்றன ஆயின; ‘ஏன்?’ எனில், நானே உனக்குப் புத்திரனாய்த்
தோன்றிவில்லையா?’ என்கிறபடியே, ‘நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர்
இரந்தால், அப்படியே வந்து பிறப்பான். இனி, இதற்குத் 4‘தன்னை அர்த்திக்குங்
காட்டில் அன்போடு தன்னைப் பேணி மறைக்கவேண்டும்படி வந்து அவதரிப்பான்’ என்று கூறலுமாம். அல்லனுமாம்
- இப்படித்தாழ நிற்பினும், சிசுபாலன் முதலியோர்க்குக் கிட்டவும் அரிதாக இருப்பான். எம்பெருமானைக்
கூறுதல் கோணை பெரிதுடைத்து - இந்த இந்த நிலைகளை எனக்கு அறிவித்த இறைவன் படிகளைப் பேச என்றால்
சால மிறுக்குடைத்து.
(10)
165
கூறுதல்ஒன்று ஆராக்
குடக்கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக்
குருகூர்ச் சடகோபன்
கூறினஅந் தாதிஓர்
ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல்வல் லார்உளரேல்
கூடுவர் வைகுந்தமே.
_____________________________________________________________
1. சஜாதீய விஜாதீய நிஷேதம்
- ஒரே சாதியிலுள்ள மற்றைப் பொருள், வேறான
சாதியிலுள்ள மற்றைப்பொருள் இவற்றினின்றும் விலக்கியபடி.
2. ‘ஏகப்பிரமாண கம்யத்வ
சாம்யமுமில்லை’ என்றது, ‘ஒரே பிரமாணத்தால் அறியத்தக்க
ஒப்புமையும் இல்லை’ என்றபடி.
3. ‘பேணுங்கால் பேணும்
உருவாகும்’ என்பதற்கு, இரு பொருள் அருளிச்செய்கிறார்:
முன்னையது, ‘அடியார்கள் ஆசைப்பட்ட
வடிவோடே அவதரிக்கும்’ என்பது;
பின்னையது, ‘மங்களாசாசனம் செய்ய வேண்டும்படியான விக்கிரகத்தையுடையவனாய்
அவதரிக்கும்’ என்பது. முதற்பொருளில், பேணுதல் - விரும்புதல். இரண்டாவது
பொருளில், பேணுதல் -
பரிவு.
|