முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

உன

166

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

உன்னால்  அல்லது செல்லாதபடி ஆக்கின நீ, இனி என்னை விட்டுப் போகாதொழிய வேண்டும்’ என்கிறார்.

    எந்தாய்-சிரமத்தைப் போக்குகிற திருமலையிலே வந்து நின்று உன்
1
ஸ்வாமித்துவத்தைக் காட்டி என்னைச் சேஷத்துவத்திலே நிறுத்தினவனே! இலங்கை செற்றாய்  - பிராட்டியுடைய சேர்க்கைக்கு விரோதியாயிருந்தவனைப் போக்கியதுபோன்று என்னுடைய சேஷத்துவ விரோதியைப் போக்கினவனே! மராமரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா - பரந்த வடிவையுடையனவான மராமரங்கள் ஏழும் மறுபாடுருவும்படியாகப் பண்டே தொளையுள்ளது ஒன்றில் ஒட்டியது போன்று, அம்பைக் கோத்த வில் வலியையுடையவனே! இதனால், அடியார்கள் திறத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியம் செய்தமையைத் தெரிவித்தபடி. கொந்து ஆர் தண் அம் துழாயினாய் -வைத்த வளையத்தோடே நின்று மராமரம் எய்தானாதலின், ‘கோத்த வில்லா’ என்றதனைச் சார்த்துத் ‘தண்அம் துழாயினாய்’ என்கிறார். ‘ஆயின், அவ்வவதாரத்தில் துழாய் உண்டோ?’ எனின், அவதாரத்துக்குச் சேர ஏதாவது ஒன்றாலே வளையம் வைக்கிலும், திருத்துழாய் அல்லது தோற்றாது இவர்க்கு. கொந்துஆர் - தழைத்திருக்கை. அமுதே - மராமரம் எய்கிற போது இலக்குக் குறித்து நின்ற நிலை இவர்க்கு இனிதாய் இருந்தபடி.

    உன்னை  என்னுள் குழைத்த எம்மைந்தா - கலக்கிற இடத்தில் ‘ஒரே பொருள்’ என்னலாம்படி கலந்து அதனால் வந்த புதுமையான யௌவனத்தை உடையவனே! இதனால், ‘இனி, ‘போவேன்’ என்றால், போகப் போமோ? போகிலும், கூடப் போமித்தனை’ என்பதனைத் தெரிவித்தபடி. வான் ஏறே - தன் இனிமையை நித்திய சூரிகளை அனுபவிப்பித்து, அதனாலே வந்த மேன்மை தோன்ற இருக்குமாறு போன்று, இவரை அனுபவித்து மேன்மை தோன்ற இருக்கின்றபடி. இனி எங்குப் போகின்றதே -‘உன்னால் அல்லது செல்லாதபடியான என்னை விட்டு உன்னை ஒழிய வாழ வல்லார் பக்கல் போகவோ? நித்தியசூரிகளை விடிலன்றோ என்னை விடலாவது?’ என்கிறார். ‘இவர் நம்மை விடிற்செய்வது என்?’ என்று இறைவனுக்கு உண்டான ஐயத்தைப் போக்குகிற இவ்விடத்தில், ‘நீ என்னை

____________________________________________________________

1. ஸ்வாமித்துவம் - இறைமைத்தன்மை. சேஷத்துவம் - அடிமைத் தன்மை.