என
முதல் திருவாய்மொழி - பா. 6 |
17 |
எனின் என்றார் திருவள்ளுவர்.
வாழிய - உலகத்தாற்கு உபகாரமாய் இருக்கிற நீ, உன்னுடைய கண்ணநீர் நீங்கி வாழ்ந்திடுக. இனி,
‘நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்பதற்கு, ‘மிக்க சூக்ஷ்மமான ஆகாயமானது நீரை முகந்துகொண்டு சிதறி
உருகி நீராய் விழுகிற வானமே!’ என்று கூறலுமாம். வானம் - ஆகாயம்.
நீயும் - உலகத்திற்கு
உபகாரகமாக வடிவு படைத்த நீயும். மதுசூதன் பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே -
பகைவர்களை அழிக்கும் பண்பினனானவனுடைய வீர குணத்திலே அகப்பட்டு, அவன் பக்கல் உண்டான
விருப்பத்தாலே பிழைக்கவும் மாட்டாமல், நோவுபடுகிறாய் ஆகாதே? பாழிமை - வலிமை, இடமுடைமை
என்றுமாம். உலகத்தில் பொருள்களுக்குத் தகுதியாகவே நசையும் இருக்கும்; எவ்வளவு நசை உண்டு,
மறுதலையில் அவ்வளவும் நைவும் உண்டாம்; ஆதலின், ‘மதுசூதன்கண் பாசத்தால் நைவாயே’ என்கிறாள்.
‘நைவாயே’ என்ற ஏகாரத்தால் ‘நைவே பலம்’ என்றபடி.
(5)
116
நைவாய எம்மேபோல் நாண்மதியே!
நீஇந்நாள்
மைவான் இருள்அகற்றாய்
மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணைமேல் ஆழிப்
பெருமானார்
மெய்வா சகம்கேட்டுஉன்
மெய்ந்நீர்மை தோற்றாயே?
பொ - ரை :
‘ஒரு கலையோடு கூடியிருக்கின்ற சந்திரனே! வருந்து தலையுடைய எம்மைப் போன்று, இக்காலத்தில் நீ
ஆகாயத்திலிருக்கின்ற மிகக் கரிய இருளினைப் போக்குகின்றாய் இல்லை; ஒளியெல்லாம் மழுங்கி
அழிகின்றாய்; ஆதலால், ஐந்து வாயினையுடைய பாம்பாகிய படுக்கையின்மேல் தங்கியிருக்கின்ற -
சக்கரத்தைத் தரித்த - இறைவனுடைய பொய் வார்த்தையைக் கேட்டு, உன் சரீரத்திலுள்ள ஒளியை
இழந்தாயோ?’ என்கிறாள்.
வி - கு :
அகற்றாய் - முற்று; எச்சமுமாம். மாழாந்து - ஒளி மழுங்கி. தேம்புதல் - கெடுதல். ‘புட்டேம்பப்
புயன்மாறி’ (பட்டினப்பாலை, 4.) என்றார் பிறரும். கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்புழிப்
போன்று, ஈண்டு ‘மெய் வாசகம்’ என்பது குறிப்பு மொழி. ‘எம்மேபோல் மாழாந்து தேம்புதி’ எனக்
கூட்டுக.
|