முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

179

180

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

179

        மாதவன் என்றதே கொண்டு, என் னைஇனி
            இப்பால் பட்டது
        யாதவங்களும் சேர்கொடேன் என்றுஎன்னுள்
            புகுந்துஇருந்து
        தீதுஅவம் கெடுக்கும் அமுதம்;
            செந்தாமரைக்கண் குன்றம்;
        கோதுஅவம் இல்என்கன்னற் கட்டி
            எம்மான்என் கோவிந்தனே.

    பொ-ரை : ‘எம்மானாகிய என்னுடைய கோவிந்தன், நான் மாதவன் என்று வாயினாற்சொன்ன அளவையே கொண்டு, என் விஷயத்தில் இனிமேல் உள்ள காலமெல்லாம் எத்தகைய தீங்குகளும் சேரச் செய்யேன் என்று உறுதிகொண்டு என்னுள்ளே புகுந்திருந்து, தீங்குகளையும் அவங்களையும் போக்கியருள்கின்ற அமிருதம் போன்றவன்; செந்தாமரை போன்ற திருக்கண்களையும் மலைபோன்ற திருமேனியையும் உடையவன்; கோதும் அவமும் இல்லாத கன்னற்கட்டி போன்று எனக்கு இனியவன்,’ என்பதாம்.

    வி-கு : ‘என் கோவிந்தன் எம்மான் மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால்பட்டது யாதவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக்கண் குன்றம்; கோது அவம் இல் என் கன்னற்கட்டி’ எனக் கூட்டுக.

    ஈடு : 1‘மேல் ‘மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார். ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக் கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகின்றோம்’ என்று அருளிச்செய்தார் அன்றே பட்டர்?

    மாதவன் என்றதே கொண்டு - நான் ‘மாதவன்’ என்று கூறிய சொல்மாத்திரத்தையே கொண்டு; ‘அல்லாத திருநாமங்

_____________________________________________________________

1. இரண்டாம் பாசுரம் பிராசங்கிகமாகையாலே முதற்பாசுரத்தோடே சங்கதி. அந்தப்புர
  வாசிகள்

  சொல்லும் வார்த்தை, ‘மாதவன்’ என்பது. ‘அந்தப்புர வாசிகள் அப்படிச் சொல்லுவாரோ?’
  என்னும் வினாவிற்கு விடை, ‘பிராட்டியே!’ என்று தொடங்கும் பொருளையுடைய
  சுலோகம். இது, குணரத்நகோசம் 52-ஆம் சுலோகம். பிராசங்கிகம் - இடைப்பிற வரல்.