முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

186

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

என்னும் இரண்டிலும் நோக்கு. விஷய பேதத்தாலே சொல்லவுமாம். அன்றியே, ‘என்றுஎன்று’ என்ற இடம், மனத்தோடு படாத வார்த்தையாய், குனிக்கையாவது, முயற்சி அளவாய், இங்கு, மனத்தோடு பட்டுப் பாடுவது ஆடுவதானபடியாய், என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி என்றதாதல்.

    என்னைக் கொண்டு - என்னைக் கைக்கொண்டு; கைக்கொள்ளுதலாவது, ‘சேற்றிலே விழுந்த மாணிக்கத்தை எடுத்துக் கழுவி விநியோகம் கொள்ளுமாறு போன்று, என்னை அங்கீகரித்து’ என்றபடி. என் பாவந்தன்னையும் பாறக்கைத்து - என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத என் பாவங்களையும் உரு மாய்ந்து போம்படி ஓட்டி. ‘என்னைக் கொண்டு’ என்பதற்கு, ‘ஓர் உபாய அநுஷ்டானத்தைச் செய்வித்து’ என்று கூறில், இப்போது இவர்க்கு1 அபசித்தாந்தமாம்; பகவானுடைய திருவருளாலே பெற்றாராகச் சொல்லுமதுக்கும் சேராது; ஆதலின், மேலதே பொருள் எமர்ஏழ் எழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் - இதுதான் என் ஒருவனளவு அன்றிக்கே, என்னோடு சம்பந்தமுடையார் ஏழ் ஏழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே தன்மையாக உடையோமாம்படி செய்தருளினான். எம்பிரான் விட்டு வல்லன் - எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் நினைத்த காரியம் செய்து தலைக்காட்ட வல்லன். சர்வசத்தி மாட்டாதது உண்டோ? 3வியாப்தியும் தமக்காக என்று இருக்கின்றார்.

181

        விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள்கண்கள்;
        விட்டுஇலங்கு கருஞ்சுடர் மலையே திருஉடம்பு;
        விட்டுஇலங்கு மதியம்சீர் சங்கு; சக்க ரம்பரிதி;
        விட்டுஇலங்கு முடிஅம்மான் மதுசூத னன்தனக்கே.

    பொ-ரை : ‘மலர்ந்து விளங்குகிற முடியினையுடைய சுவாமியான மதுசூதனனுக்குத்
திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும்

____________________________________________________________

1. அபசித்தாந்தம் - போலிக்கொள்கை; அவர்தம் கொள்கைக்கு முரண்பட்டது.

2. ‘வல்லன்’ என்பதற்கு பாவம், ‘சர்வசத்தி மாட்டாததுண்டோ?’ என்ற வாக்கியம்.

3. ‘விட்டு’ என்பதற்கு மேலே சர்வேஸ்வரன் என்று பொருள் அருளிச்செய்தார். இங்கு,
  ‘வியாப்தனானான்’ என்று வேறு பொருள் அருளிச்செய்கிறார், ‘வியாப்தியும் தமக்காக
  என்றிருக்கிறார்’ என்று. வியாப்தி - பரந்திருத்தல்.