அள
|
194 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
அளவே அன்றி, 1கருவூலத்திலே
ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்; 2‘உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது
போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி.
என் வாமனனே வல்லைகாண் - வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே,
மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும்
உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் - உகப்பின் மிகுதி.
(7)
184
வாமனன்,என்
மரகத வண்ணன்,
தாமரைக்
கண்ணினன்,
காமனைப் பயந்தாய்!
என்றுஎன்று
உன்கழல்
பாடியே பணிந்து
தூமனத் தனனாய்ப்
பிறவித்
துழதி நீங்க,
என்னை
தீமனம் கெடுத்தாய்;
உனக்கு
என்செய்
கேன்என் சிரீதரனே?
பொ-ரை :
‘என் வாமனன், மரகத வண்ணன், தாமரைக்கண்ணினன், காமனைப் பயந்தாய்’ என்றுஎன்று உன் திருவடிகளைப்
பாடி வணங்கித் தூய்மை பொருந்திய மனத்தினை உடையேனாய்ப் பிறவியின் துன்பமானது நீங்கும்படி
என்னுடைய தீய மனத்தையும் கெடுத்தாய்; என் ஸ்ரீ தரனே! உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?’ என்கிறார்.
வி-கு :
வாமனன் என்பது முதலிய மூன்றும், படர்க்கைப் பெயர்கள்; முன்னிலைப் பெயர்களாகக் கோடலுமாம்.
காமளைப் பயந்தாய் என்பது முன்னிலை. ‘பாடி, பணிந்து, மனத்தனனாகி, நீங்க, கெடுத்தாய்’ என
முடிக்க. துழதி - துன்பம். ஸ்ரீதரன் - ஸ்ரீயைத் தரித்தவன், ஸ்ரீ - திருமகள்.
ஈடு :
எட்டாம் பாட்டு. 4எம்பெருமான் தம் திறத்திற் செய்த உபகாரத்துக்குப் பிரிதியுபகாரம்
காணாது தடுமாறுகிறார்.
_____________________________________________________________
1. திருவாபரணங்கள் முதலியன
இட்டு வைக்கும் அறையைக் ‘கருவூலம்’ என்பர்; ’ஸ்ரீ
பண்டாரம்’ என்றபடி.
2. ஸ்ரீ கீதை, 11 : 18.
3. பிரத்யபிஜ்ஞை பண்ணுதல்
- நினைவிற்கு வருதல்.
4. ‘உனக்கு என் செய்தேன்?’
என்றதிலே நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|