முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

228

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

சொல்லுகிறார். 1தன் விபூதியினுடைய ரக்ஷணம் ஒருதலையானால் அவன் படும் பாட்டை அநுசந்தித்து மகிழ்ந்தவளாய் அதற்கு உரியவளான ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்கும், அதனாலே தானும் மகிழ்ந்தவனாய் அணையாநிற்கும் என்றபடி. மால் - எல்லாரைக்காட்டிலும் உயர்ந்தவனான சர்வேஸ்வரன். செய்கின்ற மால் -அவன் ஏற்றுகிற பிச்சை. ஆர் காண்பாரே - ஒருவராலே இவ்வளவு என்று அளவிடலாய் இருந்ததோ?                             

(7)

197

        காண்பார்ஆர் எம்ஈசன் கண்ணனை?என் காணுமாறு?
        ஊண்பேசில் எல்லா உலகும்ஓர் துற்றுஆற்றா;
        சேண்பால வீடோ, உயிரோ, மற்று எப்பொருட்கும்
        ஏண்பாலும் சோரான், பரந்துளன்ஆம் எங்குமே.

    பொ-ரை : ‘எம் ஈசனாகிய கண்ணனை அறிய வல்லவர் யாவர்? காணும் விதந்தான் யாங்ஙனம்? அவனுடைய உணவினைப் பேசின் எல்லா உலகங்களும் ஒரு கவளத்துக்கும் போதமாட்டா; தங்கியிருக்கும் வீடோ, எல்லா உலகங்கட்கும் அப்பாற்பட்டது; அவனோ, தன்னை ஒழிந்த மற்றை எல்லாப்பொருள்கட்கும் அந்தரியாமியாய் இருந்து கொண்டு எல்லாத்திக்குகளிலும் ஒன்றையும் விடாதவனாகி எல்லா இடங்களிலும் பரந்திருக்கிறான் ஆதலின்.’

    வி-கு : ஊண் - உணவு; உண்ணப்படுவது என்பது பொருள். துற்று - கவளம்; ‘அண்டம் எலாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கு அவைநீ, உண்டருளும் காலத்தில் ஒருதுற்றுக்கு ஆற்றாவால்’ என்றது ஒப்பு நோக்கல் தகும். ‘எண்’ என்பது ‘ஏண்’ என முதல் நீண்டது; இது எண்ணுப் பெயர். ‘முதனிலைத் தொழிற்பெயர்’ எனலுமாம். சோரான் - முற்றெச்சம்.

_____________________________________________________________

1. மேற்கூறியவற்றை எல்லாம் கடாட்சித்துத் தழுவுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார், ‘தன்
  விபூதியினுடைய ரக்ஷணம்’ என்று தொடங்கி. ‘மால்’ என்பதற்கு இரு பொருள்: சுவாமி
  ஒன்று; வியாமோகம் ஒன்று.

  ‘அரவாகிச் சுமத்தியால், அயில்எயிற்றின் ஏந்துதியால்,
  ஒருவாயின் விழுங்குதியால், ஓர்அடியால் ஒளித்தியால்,
  திருவான நிலமகளை; இஃது அறிந்தாற் சீறாளோ
  மருவாருந் துழாய்அலங்கல் மணிமார்பின் வைகுவாள்?’

  என்ற கம்பநாட்டாழ்வாருடைய திருவாக்கு இத்திருப்பாசுரத்தை அடியொற்றியது.

(விராதன் வதை. செ. 58)