New Page 1
24 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
யுமுடைத்தான கழியே!
1‘வெளிறான இருள் அன்றி, இருளின் புற இதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற்போன்றிருக்கிறது
இருள்’ என்பாள். ‘இருளின் திணி வண்ணம்’ என்கிறாள். திணி - வயிரம். இனி, 2‘அச்சமான
இருள்’ என்று பொருள் கூறலுமாம். போய் மருளுற்று - மிகவும் அறிவு கெட்டு. 3‘மயர்வற
மதிநலம் அருளப் பெற்றாருடைய அறிவு கேட்டிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கின்றதே அதனுடைய அறிவுகேடு!’
என்பாள், ‘போய் மருளுற்று’ என்கிறாள்.
இராப் பகல்
துஞ்சிலும் நீ துஞ்சாயால் - காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம்.
உருளும் சகடம் உதைத்த பெருமானார் - காவலாக வைத்த சகடந் தானே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்துவர,
தாயுங்கூட உதவாத சமயத்திலே முலை வரவு தாழ்த்த காரணத்தால் சீறி நிமிர்த்த திருவடிகளால் முடித்து
உலகத்துக்குத் தலைவனாகிய தன்னைத் தந்த உபகாரகன். அருளின் பெருநசையால் - ‘அத்தகைய உபகாரகன்
காதலிக்கு உதவானோ?’ என்னும் ஆசையாலே. அருளின் கனத்துக்குத் தக்கபடியே நசையின் கனமும்
இருக்குமாதலின், ‘உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெருநசை’ என்கிறாள். ஆழாந்து
நொந்தாயே - ‘தரைப்பட்டு நோவுபட்டாயே!’ என்கிறாள்.
(8)
119
நொந்தாராக் காதல்நோய்
மெல்லாவி உள்உலர்த்த
நந்தா விளக்கமே!
நீயும் அளியத்தாய்!
செந்தா மரைத்தடங்கண்
செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண்துழாய்
ஆசையால் வேவாயே?
பொ - ரை :
‘கெடாத விளக்கே! ஒருகால் வருந்த, அதனுடன் முடிந்தது என்பது இன்றி, அமையாது மேலும் மேலும் வளர்ந்து
கொண்டே செல்லுகின்ற காதல் நோயானது, மிருதுவான உயிரை உள்ளே உள்ள பசையெல்லாம் அறும்படி
உலர்த்த, உலர்த்திய காரணத்தால் நீயும் இரங்கத் தக்கதாக இருக்கின்றாய்; செந்தாமரை
____________________________________________________________
1. வெளிறு - அசாரம், சாரமின்மை
2. அச்சம் - வேறொன்றன்
கலப்பில்லாமை,
3. இத்திருப்பதிகத்தில்
இரண்டாம் திருப்பாசுரத்தில் ‘நீயும்’ என்ற சொல்லுக்கு எழுதிய
பொருளை ஈண்டு நினைவு கூர்க.
|