212
பத்தாந்திருவாய்மொழி
- பா. 1 |
269 |
212
கிளர்ஒளி இளமை
கெடுவதன் முன்னம்
வளர்ஒளி
மாயோன் மருவிய கோயில்
வளர்இளம்
பொழில்சூழ் மாலிருஞ் சோலை
1தளர்விலர்
ஆகில் சார்வது சதிரே.
பொ - ரை :
‘பொங்கி வருகின்ற ஒளியையுடைய இளமைப்பருவம் கெடுவதற்கு முன்னே, வளர்கின்ற ஒளியோடு கூடிய மாயவன்
எழுந்தருளியிருக்கின்ற கோயில், வளர்கின்ற இளமையையுடைய சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலையைத்
தளர்ச்சி அற்று இருக்க விரும்பு வீராகில் சென்று சேர்வதே மேலான பேறு’ என்பதாம்.
வி-கு :
‘கெடுவதன் முன்னம் தளர்விலராகில், சார்வது சதிர்’ எனக் கூட்டுக. ‘கோயிலாகிய
மாலிருஞ்சோலை’ என்க. சார்வது தொழிற்பெயர்.
ஈடு :
முதற்பாட்டு. 2‘திருமலையை அடைகையே இவ்வாத்துமாவுக்கு நிரதிசயமான பேறு’ என்கிறார்.
‘திருமலையை அடைமின்’
என்கிறார்; ‘செய்கிறோம்’ என்று ஆறியிருந்தார்கள்; ‘கெடுகின்றவர்களே! எதனை நம்பித்தான்
நீங்கள் ஆறியிருக்கிறீர்கள்?’ ‘கழிந்த பருவத்தை உங்களாலே தான் மீட்கப் போமோ? மேலும்,
3‘காதலியான சீதை தூரத்திலிருக்கிறாள் என்று எனக்குத் துக்கம் இல்லை; ஒருவனால்
அபகரிக்கப்பட்டாள் என்று எனக்குத் துக்கம் இல்லை; வயதானது பயன் இன்றிக் கழிகின்றதே என்று
அதற்கே நான் துக்கிக்கிறேன்,’ என்றும், 4‘வாள்களாகி நாள்கள் செல்ல’ என்றும்
முன்னையோருடைய வார்த்தைகளும் இருக்கின்றனவே? ஆதலால், ‘கிளர்ஒளி இளமை கெடுவதன் முன்னம்
சார்மின்’ என்கிறார்.
_____________________________________________________________
1. ‘தளர்விலராகி’ என்பதும்
பாடம்.
2. ‘சார்வது சதிரே’ என்றதனைக்
கடாஷித்து அவதாரிகை.
3. ஸ்ரீராமா. யுத். 5 : 5. இங்கு
29-ஆம் பக். குறிப்புரை பார்க்கவும்.
4. திருச்சந்த விருத்தம்,
112. இப்பாசுரத்தோடு,
‘நாளென ஒன்றுபோற் காட்டி
உயிர்ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.’
என்ற திருக்குறள் ஒப்புமையுடையது.
|