இளக
பத்தாந்திருவாய்மொழி
- பா. 2 |
271 |
இளகிப்பதித்துச் செல்லாநிற்கும்
சோலை சூழ்ந்த மாலிருஞ்சோலை. அடிமை செய்கிறவர்கள், கிளர் ஒளி இளமையையுடையவர்கள்; அடிமை
கொள்ளுகிறவன், வளர் ஒளி மாயோன்; அடிமை செய்கிற தேசம், வளர் இளம்பொழில் சூழ்
மாலிருஞ்சோலை. ஆக, இப்படி அடிமை செய்யுமவனும், அடிமை கொள்ளுமவனும், அடிமை செய்யும் தேசமும்
ஒத்த பருவமாய் ஆயிற்று இருப்பது.
தளர்வு இலர் ஆகில்
- ‘முகூர்த்தகாலமாயினும் ஒரு கண நேரமாயினும் வாசுதேவனைச் சிந்திக்க இல்லை என்பது யாது ஒன்று
உண்டு? அது பெரிய இழிவு; பெரிய கெடுதி’ என்கிறபடியே, 1‘திருமலையைக் கிட்டாமையால்
வருகின்ற எவ்வகையான துக்கமும் இல்லாமல் இருக்க வேண்டில். இனி, ‘திருமலையே அடையத்தக்கது’ என்னும்
புத்தி பிறந்து அதனை அடைவதற்கு விரோதியாய் வருகின்ற 2அனர்த்தபாகிகள் அல்லாதாராய்
ஒழிய வேண்டில் எனலுமாம். சார்வதே சதிர் - திருமலையைக் கிட்டுமிதுவே இவ்வாத்துமாவுக்குச் சதிர்;
அல்லாதவை எல்லாம் 3இளிம்பு. ‘கண்ணுக்கு இலக்கான விஷயங்களை விட்டு வேறே சிலவற்றைப்
பெறுகைக்கு எண்ணுகின்றீர்கள்; நீங்கள் எண்ணுமதுவே இளிம்பு; இதுவே சதிர்’ என்றபடி.
(1)
213
சதிர்இள மடவார்
தாழ்ச்சியை மதியாது,
அதிர்குரல் சங்கத்து
அழகர்தம் கோயில்
மதிதவழ் குடுமி
மாலிருஞ் சோலைப்
பதியது ஏத்தி எழுவது
பயனே.
பொ-ரை :
‘அழகையும் இளமையையும் உடைய பெண்கள் தாழ்ச்சி தோன்றப் பேசும் வார்த்தைகளையும் செய்யும் செயல்களையும்
_____________________________________________________________
1. ‘தளர்விலராகில்’
என்பதற்கு, இருவகைப் பொருள் அருளிக் செய்கிறார்; முன்னையது,
‘திருமலையைச் சாராமையாகிற துக்கம்
இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது ஸ்ரீ
ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள். பின்னையது,
‘திருமலையைக்
கிட்டுகைக்கு விரோதியான பாவங்கள் இன்றியே ஒழிய வேண்டில்’ என்பது. இஃது
எம்பெருமானார்
நிர்வாஹத்துக்கு ஒட்டிய பொருள்.
2. அனர்த்த
பாகிகள் - கேட்டினையடைகின்றவர்கள்.
3. இளிம்பு - சாமர்த்தியம்
இன்மை.
|