முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அயன

பத்தாந்திருவாய்மொழி - பா. 4

275

அயன்மலை - திருமலையினது சம்பந்தத்தையே தனக்குப் பெயராக உடைத்தான மலை. 1அகஸ்தியருக்கு உடன் பிறந்தவர்’ என்னுமாறு போன்று ‘மாலிருஞ்சோலை அயன்மலை’ என்கிறார். அடைவது அது கருமமே - ‘அஃதொன்றுமே செய்யத் தக்கது; அல்லாதவை அடையச் செய்யத் தகாதன’ என்கிறார்.

(3)

215

        கருமவன் பாசம் கழித்துஉழன்று உய்யவே
        பெருமலை எடுத்தான் பீடுஉறை கோயில்
        வருமழை தவழும் மாலிருஞ் சோலை
        திருமலை அதுவே அடைவது திறமே.

    பொ-ரை : ‘கருமங்களாகிற வலிய பாசங்களைக் கழித்து அடிமை செய்து உய்யும்பொருட்டு, பெரிய மலையை எடுத்தவனான கண்ணன் தனது பெருமையெல்லாம் விளங்கும்படி தங்கியிருக்கிற கோயில் வருகிற மேகங்கள் தவழும்படி மிக உயர்ந்து பரந்த சோலைகளையுடைய திரு மலையை அடைவதுவே செய்யும் வகை’ என்றவாறு.

    வி-கு : ‘உய்ய அடைவது திறம்’ எனக் கூட்டுக. இனி ‘உய்ய உறை கோயில்’ எனக் கூட்டலுமாம். எடுத்தான் - வினையாலணையும் பெயர். ‘கோயிலாகிய திருமலை’ என்க.

    ஈடு : நாலாம் பாட்டு. ‘அடியார்கள் கர்மங்களின் தளையைப் போக்கி அடிமை செய்து வாழுகைக்கு ஈடாம்படி சர்வேஸ்வரன் வாழ்கின்ற திருமலையை அடைகையே செய்யத்தகும் வகையாம்,’ என்கிறார்.

    கருமம் வன் பாசம் கழித்து உழன்று உய்யவே - 1திருமலையை அடையுமது ஒழிய இது நம்மாற்செய்து தலைக்கட்டப்போமோ?’ என்று இங்ஙனம் 2ஆழ்வார் ஓர் உருவிலே பணித்தாராம்; அங்ஙனமும் கொள்க. இனி, எம்பெருமானார் ‘கருமவன் பாசம் கழிககைக்காகவும், கழித்து உய்கைக்காகவும்’ என்று இங்ஙனம் அருளிச் செய்வார். அதாவது, ‘கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிககைக்காகவும், தன் பக்கல் கைங்கரியத்தைச் செய்து உய்வு பெறுகைக்

_____________________________________________________________

1. ஸ்ரீராமா. ஆரண்.

2. ஆழ்வான் நிர்வாகத்தில் ‘உய்யவே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறை; ‘உய்யப்போகாது’
  என்றபடி. ஆழ்வான் - கூரத்தாழ்வார். கூரத்தாழ்வாரை ‘ஆழ்வான்’ என்றும்,
  நம்மாழ்வாரை ‘ஆழ்வார்’ என்றும் வழங்குதல் வைணவப்பெருமக்கள் வழக்கு.
  எம்பெருமானார் நிர்வாகத்தில் ஏகாரம், தேற்றம்; ‘உய்யவே உறைகின்ற கோயில்’
  என்பதுபொருளாம்.