New Page 1
பத்தாந்திருவாய்மொழி
- பா. 9 |
283 |
‘ஆயின், பிரபந்நர்கள்
வலஞ்செய்யலாமோ? வலம் செய்தல் உபாய கோடியில் சேராதோ?’ எனின், ‘பிள்ளை திருநறையூர்
அரையரும் பட்டரும் பிரதக்ஷணம் பண்ணாநிற்கப் பின்னே சேவித்துக்கொண்டு போனேன்; 1அல்லாதார்
கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் 2கண்களாலே
பருகுவாரைப் போலே பார்த்துக்கொண்டு வந்தார்கள்,’ என்று நஞ்சீயா அருளிச்செய்வர்.
நாளும் மருவுதல் வழக்கே -3நித்திய சூரிகளுடைய யாத்திரையே தனக்கு யாத்திரையானால்
பின்னே மறுவல் இடாது; இதுவே வழக்கு.
(8)
220
வழக்குஎன நினைமின்
வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான்
அமர்பெருங் கோயில்
மழக்களிற்று இனம்சேர்
மாலிருஞ் சோலை
தொழக்கரு துவதே துணிவது
சூதே.
பொ - ரை :
‘கொடிய பாவங்களில் மூழ்காமல், பேயான பெண்ணை அழித்தவன் எழுந்தருளியிருக்கிற கோயில்,
இளமையான யானைக் கூட்டங்கள் சேர்ந்திருக்கின்ற திருமாலிருஞ்சோலையைத் தொழவேண்டுமென்று கருதுதலைத்
துணிதலே வெற்றிக்குக் காரணம்; இதனை முறை என்று நினைமின்.’
வி-கு :
‘மூழ்காது தொழக் கருதுவது’ என முடிக்க. கருதுவது துணிவது என்பன, தொழிற்பெயர்கள். அழன் + கொடி
- அழக்கொடி; அழன் - பிணம். கொடி - பெண்ணுக்கு ஆகுபெயர்.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. ‘திருமலையைத் தொழுவோம்’ என்று அறுதியிட்டு நினைக்கை அமையும் வெற்றிக்குக்
காரணம்,’ என்கிறார்.
வழக்கு என நினைமின்
- நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள். வல்வினை மூழ்காது - உங்களால்
_______________________________________________________
1. அல்லாதார் - சாதனத்தைக்
கருதி வலம் செய்யுமவர்.
2. ‘கண்களாலே பருகுவாரைப்
போலே’ என்கையாலே, பிராப்பியத்துவம் தெளிவாம்;
‘சாதனம் கருதி அன்று’ என்பது வெளிப்படை.
3. நித்திய சூரிகளைப்
போன்று கைங்கரியமே தாரக போஷக போக்கியங்களானால், வேறு
பயன்களினுடைய ஆசைக்கும்,
அதன் மூலமாக உண்டாகும் சாதன புத்திக்கும்
காரணமில்லை என்பதனை விளக்க வந்தது ‘நித்தியசூரிகள்’
என்று தொடங்கும்
வாக்கியம். மறுவலிடாது - திரும்பாது.
|