ஆக
4 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஆக, ஸ்ரீராமபிரான்
தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! 1உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா!
நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற்
போன்று கூப்பிடுகிறார் இங்கு.
இத்திருவாய்மொழியில்,
2இளைய பெருமாளைக்காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’
என்னில், 3‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்; இவர், அந்த
மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமையற, பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார்
ஆதலால்.
111
வாயும் திரைஉகளும்
கானல் மடநாராய்!
ஆயும் அமர்உலகும்
துஞ்சிலும்நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும்
மீதூர எம்மேபோல்
நீயும் திருமாலால்
நெஞ்சம்கோட் பட்டாயே?
பொழிப்புரை :
‘மேலும் மேலும் வந்து பொருந்துகிற அலைகள் தாவுகின்ற கடற்கரைச்சோலையிலுள்ள மடநாராய்! என்
தாயும் நித்திய சூரிகளும் தூங்கினாலும், நீ தூங்குகிறாயில்லை; ஆதலால், என்னைப் போன்று நீயும்,
நோயும் பசலையும் சரீரமெங்கும் பரவும்படி, திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ? கூறுக,’ என்கிறான்
என்பதாம்.
விசேடக்குறிப்பு
: இப்பாசுரம்
‘தன்னுட் கையாறு எய்திடு கிளவி’ என்ற துறையின்பாற்படும். அதாவது. தனக்கு, நேர்ந்த துன்பத்தை,
தன் ஆற்றாமையால் பிறிதொன்றன்மேலிட்டுக் கூறுதல். இவ்வாறு கூறுதற்குப் பயன், களவொழுக்கத்திலே
நின்று சிறைப்புறத்தானாய தலைமகன் கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து
கொள்வான்; தோழி கேட்பின், வெளிப்படையாக வந்து இவளை மணம் புரிந்து கொள்வான்; தோழி கேட்பின்,
தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம் புரிந்துகொள்ளச்செய்வாள்; யாரும் கேளாராயின், தலைவி
தானே
_____________________________________________________________
1.
ஸ்ரீராமா. அயோத். 102 : 4
2. இளையபெருமாள் -
இலக்குமணன்
3.
ஸ்ரீராமா, அயோத். 53 : 31.
|