|
ந
நிரதிசய போக்கிய ஜாதத்திலே
1பிரவணன் ஆனாய்; உன்னை விட்டால், பின்னை 2’நினைவு தவறுவதால்
புத்தி நாசமடைகிறது; புத்தி நாசத்தினால் நாசமடைகின்றான்,’ என்கிறபடியே ‘புத்தி நாசமடைவதற்குரிய
பொருள்களில் இவர்கள் பிரவணர்களாய் இங்ஙனம் நோவுபட்டே போமித்தனையாகாதே!’ என்கிறார்
என்றபடி.
(4)
227
வருந்தாத அருந்தவத்த
மலர்கதிரின்
சுடர்உடம்பாய்
வருந்தாத ஞானமாய்
வரம்புஇன்றி
முழுதுஇயன்றாய்;
வருங்காலம் நிகழ்காலம்
கழிகால
மாய்உலகை
ஒருங்காக
அளிப்பாய்சீர்
எங்குஉலக்க
ஓதுவனே?
பொ-ரை :
வருந்தாமலே
வந்த ( இயற்கையாகவுள்ள ) மிக மலர்ந்த பேரொளியுருவனாய் இயல்பிலேயமைந்த ஞானவுருவனாய் எல்லை
இல்லாதபடி எல்லாப்பொருள்களிலும் நிறைந்திருக்கின்றாய்; மூன்று காலங்களுக்கும் உரியவனாகி,
உலகங்களையெல்லாம் ஒரு படிப்படப் பாதுகாக்கின்றாய்; இத்தகைய உன்னுடைய நற்குணங்களை முடிவு பெறும்படி
எங்ஙனம் கூறுவேன்?
வி-கு :
தவத்த - உரிச்சொல் ஈறு திரிந்தது; ‘தவ’ என்பது சொல். ‘உடம்பாய் முழுதியன்றாய்,’ என்க.
‘ஓதுவன் என்பதில் ‘அன்’ விகுதி தன்மைக்கண் வந்தது.
ஈடு : ஐந்தாம்
பாட்டு. மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி. நான்காம் பாட்டில் நாட்டாருடைய
இழவு நடுவே 3பிரசங்காத் பிரஸ்துதமித்தனை. ‘கோவிந்தா’ பண்புரைக்க மாட்டேனே,’
என்று சொல்லுவான் என்? நாட்டாருடைய பேரிழவு நிற்க; மயர்வற மதிநலம் அருளப்பெறுகையாலே நீர்
வேறுபட்டவரே; உலகத்தாரில் வேறுபட்ட அளவேயோ! விண்ணுளாரிலும் வேறுபட்டவரே; ஆதலால், நீர்
நம்மைப் பேசமாட்டீரோ?’ என்ன, ‘என்னை எல்லாரிலும் வேறு
____________________________________________________
1. பிரவணன் - ஈடுபாடுடையவன்.
2. ஸ்ரீ கீதை, 2 :
69.
3. நடுவே பிரசங்காத்
பிரஸ்துதம் - வேறு ஒரு காரணமாக வருகின்ற
இடைப்பிற வரல்.
|