|
ச
சிலவும், புண்ணிய பாவங்களாலேயாயிருத்தல்
சிலவுமாக இருப்பனவாமன்றோ? எங்கும் நிறைந்தவனாய் உலகமே உருவனாயிருக்கிற இறைவன் சரீரத்தை
மேற்கொள்ளுவது, 1‘காண வாராய்’ என்று விடாய்த்திருப்பார் கண்டு அனுபவிக்கைக்குத்
தண்ணீர்ப் பந்தல் வைத்தபடியேயாம் என்றபடி. 2தேவரீருடைய திவ்விய மங்கள
விக்கிரகமும் தேவரீருக்கன்று; தேவர் அடியர்களுக்காகவே பிரகாசிக்கின்றீர்,’ என வருதல் காண்க.
வருந்தாத ஞானமாய்
- ஒரு சாதனத்தைச் செய்தாதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றாதல் வந்ததன்றி, ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாய்.
வரம்பின்றி முழுது இயன்றாய் - எல்லையில்லாத எல்லாப் பொருள்களையும் நிர்வஹித்தாய். இயலுகை
- நிர்வஹிக்கை. ‘உடையவனாதலின் உடைமையை நிர்வஹிக்கிறான்,’ என்றபடி. உடையவனாய்க் கடக்க
நிற்கையன்றி நோக்கும்படி சொல்லுகிறார்
மேல் :
வருங்காலம் நிகழ்காலம்
கழிகாலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவன் - ‘முக்காலத்திற்கும் நிர்வாஹகனாய்
உலகங்களை ஒருபடிப்படக் காத்துக்கொண்டு செல்லுகிற உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியச்
சொல்லித் தலைக்கட்டலாயிருந்ததோ? இல்லை,’ என்றபடி.
‘உன்னுடைய திவ்விய
மங்கள விக்கிரகத்தின் வைலக்ஷண்யம் அது; எல்லாப்பொருள்களையும் ஒரே காலத்தில் காட்சிக்கு
இலக்கு ஆக்கும் ஆற்றலுடையவனாயிருக்கிற இருப்பு அது; பாதுகாக்குந்தன்மை அது; ஏதென்று பேசித்
தலைக்கட்டுவன்?’ என்கிறார்.
(5)
228
ஓதுவார் ஓத்துஎல்லாம்
எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின்புகழின்
தகையல்லால் பிறிதுஇல்லை;
போதுவாழ் புனந்துழாய்
முடியினாய்! பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய்!
என்சொலியான் வாழ்த்துவனே!
________________________________________________
1. திருவாய்மொழி,
8. 5 : 2.
2. ஜிதந்தா ஸ்தோத்திரம்,
5. இச்சுலோகம், அடியார்கள் அனுபவிப்பதற்காகவே
இறைவன் திவ்விய மங்கள விக்கிரகத்தை மேற்கொள்ளுகிறான்
என்பதற்கு
மேற்கோள்.
|