முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
19

229

229

வாழ்த்துவார் பலராக;
    நின்னுள்ளே நான்முகனை
‘மூழ்த்தநீர் உலகுஎல்லாம்
    படை’என்று முதல்படைத்தாய்;
கேழ்த்தசீர் அரன்முதலாக்
    கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து
சூழ்த்துஅமரர் துதித்தால்உன்
    தொல்புகழ்மா சூணாதே?

    பொ-ரை : வாழ்த்துகின்றவர் பலர் ஆயிடுக; அதனால் வந்தது என்? தண்ணீராற்சூழப்பட்ட உலகங்களையெல்லாம் உண்டாக்குவாய் என்று பிரமனை நின்னுள்ளே முதலில் உண்டாக்கினாய்; ஒளி மிக்க சிறப்பினையுடைய சிவபிரான் முதலாக விளங்குகின்ற தேவர் அனைவரும் கூடி ஒளி மிக்கவர்களாகி மனவெழுச்சியோடு சூழ்ந்துகொண்டு துதித்தால், உனது பழமையான நற்குணம் மாசு ஏறாதோ? ‘மாசு ஏறும்’ என்றபடி.

    வி-கு : மூழ்த்த - சூழ்ந்த. கேழ் - ஒளி. தெய்வமாய் -ஒளியுடையவர்களாகி. ‘கேழ்த்த சீர் அரன் முதலா அமரர் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்ந்து துதித்தால்’ எனக் கூட்டுக. சூழ்த்து - சூழ்ந்து : வலித்தல் விகாரம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1’வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே? அவர்கள் நம்மை ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு,’ என்கிறார்.

    வாழ்த்துவார் பலராக - வாழ்த்துவார் பலர் ஆயிடுக; ‘ஆனால் தான் வந்தது என்? வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்று 2பட்டர் அருளிச்செய்வர். நின்னுள்ளே

____________________________________________________

1. பட்டர் நிர்வாகத்தைப் பின் பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல்
  படைத்தாய்; அதனால், வாழ்த்துவார் பலரும் உண்டாயிடுக; ஆனால் தான்
  வந்தது என்? அவர்களாலேதாம் ஏத்தப் போமோ? வேதங்களைக் காட்டில்
  இவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்பது பட்டருடைய திருவுள்ளம். ‘வைதிக
  புருஷர்கள்’ என்றது, வியாசர் முதலியோரை.