அத்தகைய பிரமன் ஏத்தினாலும்
தேவர்க்குத் தாழ்வாமித்தனை யன்றோ?’ என்கிறார் என்று பட்டர் அருளிச்செய்வர்.
மாசு உண்ணாச்
சுடர் உடம்பாய் - 1ஹேயப் பிரத்யநீகமாய்ச் சுத்த சத்துவமாகையாலே நிரவதிக பேரொளி
உருவமான திவ்விய விக்கிரகத்தையுடையையாய். மலராது குவியாது - 2’அரும்பினை அலரை’
என்னும்படியாயிருக்கும்; அதாவது, ‘யுவாகுமார:’ என்கிறபடியே ஒரே காலத்தில் இரண்டு நிலையும்
சொல்லலாயிருக்கை. இனி, ‘மலராது குவியாது’ என்பதற்கு, 3’தன் சொரூபத்திற்குத்
துல்லியமான ஒரே தன்மையையுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்’ என்கிறபடியே, 4குறைதல்
வளர்தலின்றி இருக்கின்ற திருமேனியையுடையையாய்’ என்று பொருள் கூறலுமாம். மாசு உண்ணா ஞானமாய்
- ஒருகாரணத்தாலே மாசு ஏறக் கூடியதல்லாத ஞானத்தையுடையையாய். ‘மலராது குவியாது’ என்பதனை இடைநிலைத்
தீவகமாக இதற்கும் கூட்டுக. ஆக, ‘உலகமக்கள் கர்மங்காரணமாக மேற்கண்ட சரீரங்கட்கு வரக்கூடிய
சொரூபம் வேறுபட்ட தன்மையுமில்லை இவன் திருமேனிக்கு; அவர்கள் ஞானத்துக்கு வரக்கூடியதான வேறுபாட்டுத்
தன்மையுமில்லை இவனுடைய ஞானத்துக்கு,’ என்கை. முழுதுமாய் - சொல்லப்படாத மற்றைக் குணங்களை யுடையையாய்.
இனி, இதற்கு, ‘உலகமே உருவமாக நிற்கும் நிலை’ என்று பொருள் கூறலுமாம். முழுது இயன்றாய் - எல்லாவற்றையும்
நிர்வஹித்தாய். இது, மேல் ‘வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதன் 5அநுவாதம்.
மாசு உண்ணா வான்
கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால் மாசு உண்ணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே - மறதி முதலிய
காரணங்கள் இல்லாத ஞான முதலான ஆபரணங்களையுடையான்