|
தத
தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை
ஒவ்வார் பெருமாள் என்கிறது; ‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், 1இனிமையில் ஸ்ரீ
பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது. ‘நீத: - அழைத்துச் செல்லப்பட்டான்’ - ஒரு குற்றுடைவாள்,
நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது, ‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற
காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே? தான் வேறு
ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.
‘பிரீதி
புரஸ்க்ருத: - தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று
இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று; ‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு
போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்; ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா
அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, 2‘அஹம் சர்வம் கரிஷ்யாமி - நான் எல்லா
அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று, இவனும் ‘நாம் எல்லா
அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத்தள்ளப் போனான்.
3எம்பெருமானார்
இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி,
பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று
அருளிச்செய்தார். இது காரணமான பின்பு, சொன்ன 4மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ?
அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்
____________________________________________________
1. ‘எண்ணில்
கோடி இராமர்க ளென்னிலும்
அண்ணல் நின்னரு
ளுக்குஅரு காவரோ?
புண்ணி யம்எனும்
நின்னுயிர் போயினால்
மண்ணும் வானும்
உயிர்களும் வாழுமோ?’
என்றார்
கௌசல்யா தேவியார்.
2.
ஸ்ரீ ராமா. அயோத்.
31 : 25.
3. ‘இப்படிப் பரதாழ்வானையே
பற்றியிருந்தால், பெருமாளுடைய பிரீதிக்கு
விஷயமானபடி என்?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘எம்பெருமானார்’ என்று தொடங்கி.
4. மிகை - ஏற்றம்.
|