முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
259

New Page 1

போகத்திலே சேர்க்கை உளதாம்படி பண்ணினான் ஆதலின், ‘அருமை ஒழிய’ என்கிறார்,’ என்னலுமாம். அன்று - 1தூர்வாச சாபத்தாலே பீடிக்கப்பட்டு வருந்திய அக்காலத்தில். ஆர் அமுது ஊட்டிய அப்பனை - 2வானவரைப் பெண்ணாகி அமுது ஊட்டும் பெருமான் அன்றோ? அப்பன் - உபகாரகன். 3குழந்தைகட்குத் தாய் பண்ணும் உபகாரமாவது, அதன் முகம் வாடாமல் வளர்த்தலே அன்றோ?

    பெருமை - 4‘உதாரர்கள்’ என்கிறபடியே, தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்குப் போலே, செல்வம் முதலியவற்றை விரும்பியவர்கட்கும் ‘இதனையாகிலும் நம் பக்கல் கொள்ளப்பெற்றோமே! இவர்கள் நமக்குச் சர்வஸ்வதானம் பண்ணுகிறார்கள் அன்றோ?’ என்று இருக்கும் பெருமை. 5நாட்டார் படி அல்ல இவனது: நாட்டில் கொடுப்பார் உதாரராயிருப்பார்; இங்குக் கொள்வார் உதாரராயிருப்பார். யாதேனுமாகக் குறை தீர்ப்பார் உதாரராமித்தனை அன்றோ? பிதற்ற வல்லாரை - 6‘அறவனை’ என்கிறபடியே, ‘வேறு பிரயோஜனங்களை விரும்புகிறவர்களிடத்திலும் இப்படியிருப்பதே!’ என்று இதனை நெஞ்சிலே நினைத்து அடைவுகெடக் கூப்பிட்டு ஏத்துமவர்களை. பிதற்றுமவர் கண்டீர் - ‘இந்நீர்மை 7இவர்களுக்கு நிலமாவதே!’ என்று
____________________________________________________

1. இச்சரிதப் பகுதியைக் கம்பராமாயணம், பாலகாண்டம், அகலிகைப் படலம், 4
  முதல் 26 முடிய உள்ள செய்யுள்களில் காணலாகும்.

2. ‘நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு வானவரைப்
   பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார்’

  என்பது பெரிய திருமொழி, 2. 6 : 1.

3. ‘வேறு பலன்களைக் கொடுப்பது உபகாரம் ஆகுமோ?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘குழந்தைகட்குத் தாய்’ என்று தொடங்கி.

4. ஸ்ரீ கீதை, 7 : 18. சர்வஸ்வ தானம் - எல்லாவற்றையும் கொடுத்தல்.

5. ‘கொள்ளுகின்றவர்கள் உதாரராம்படி என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘நாட்டார் படியல்ல’ என்று தொடங்கி,
  ‘கொள்ளுகின்றவர்களிடத்தில் கொடைத்தன்மை ஏது?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘யாதேனுமாக’ என்று தொடங்கி. உதாரர் -
  வள்ளல்.

6. திருவாய். 1. 7 : 1.

7. ‘இவர்களுக்கு’ என்றது, வேறு பலன்களை விரும்புகிறவர்களைக் குறித்தபடி.
  ‘அவர்கள் அவன் பக்கலிலே இருக்கும் இருப்பை’ என்றது.
  ‘பிரயோஜநாந்தரபரர்க்கு அதனைக் கொடுத்துவிடுவதே; இது என்ன நீர்மை!’
  என்று அநுசந்தித்துப் பிதற்றுதலைக் குறித்தபடி. அவர்கள் - அடியார்கள்.