|
New Page 1
போன்ற நிறத்தையுடையவனை,
எம்மானை, ஒளி பொருந்திய ஜோதி சொரூபத்தையுடையவனைத் தம் மனத்தின்கண் வைத்துத் தியானிப்பவர்கள்தாம்,
சலனமில்லாமல் எம்மை அடிமைகொண்டு இப்பிறவியோடு மற்றைப் பிறவிகளோடு வேற்றுமையின்றிக்
காப்பவர் ஆவர்.
வி-கு :
கண்டீர் - தெளிவின்கண்
வந்தது. சன்மாந்தரம் - வேறு பிறவி. அந்தரம் - வேறு. எம்மை தனித்தன்மைப்பன்மை.
ஈடு :
ஆறாம் பாட்டு. 1‘மேலே
கூறிய சௌந்தர்யம் முதலியவற்றைத் திரள அனுபவிக்குமவர்கள் எனக்கு இரட்சகர்’ என்கிறார்.
அளிக்கும் பரமனை
- இவ்வாத்துமாக்களைக் காப்பாற்றுமிடத்தில் தனக்கு மேம்பட்டாரை இல்லாதவனை. அன்றிக்கே,
‘கொடுக்குமிடத்தில் தனக்கு மேல் இல்லாதவன்’ என்னுதல். அளித்தல் - காத்தலும், கொடுத்தலும்.
கண்ணனை - அளிப்பது தன்னையே அன்றோ? 2‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்றார்
முன்னும். ஆழிப்பிரான்தன்னை - 3‘நாயுதாநி - ஆயுதங்கள் உனக்காக இல்லை’ என்கிறபடியே,
தன்னோடு ஆயுதத்தோடு வாசி அற ‘பக்தாநாம் - பக்தர்களுக்காகவே’ என்று இருக்குமவனை. இதனால்,
‘பரமனை’ என்ற பாசுரத்தை நினைக்கிறது. துளிக்கும் நறுங்கண்ணி - 4அவ்வளவில் அகப்படாதாரை
அகப்படுத்துகைக்கு ஈடான கண்ணி இருக்கிறபடி. திருமேனியில் பரிசத்தாலே செவ்வி பெற்றுத் தேன்
பெருக்கு எடுக்கின்ற நறு நாற்றத்தையுடைய திருத்துழாய்மாலையையும் உடையனாய்; ‘நாதனை’ என்ற
பாசுரத்தில், நறுந்துழாய்ப் போதனை’ என்ற பகுதியை நினைக்கிறது. தூ மணி வண்ணன் எம்மான்தன்னை
- பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கின்ற திருநிறத்தைக் காட்டி
_____________________________________________________
1. ‘மேலே கூறிய’
என்றது, இப்பாசுரத்திற்கு முன்னே போந்த ஐந்து
பாசுரங்களிலும் கூறியவற்றை. முன் ஐந்து
பாசுரங்களின் பொருள்கள்
இப்பாசுரத்தில் குறிக்கப்படுதலை வியாக்கியானத்திற்காணலாகும்.
2.
திருவாய். 2. 7 : 11.
3.
ஜிதந்தா.
4. ‘ஒரு மிருகத்தை வளைத்தால்
அது தப்பிப் போகுமேயாயின் அதனைக்
கண்ணியிட்டுப் பிடித்தலைப் போன்று’ என்பது ரசோக்தி.
கண்ணி -
குளச்சிட்ட கயிறும், மாலையுமாம்.
|