| க 
கின்றானோ’ என்கிறபடியே, 
இழந்தவை எல்லாம் தானேயாய் நின்றான் ஆதலின். 
‘அருள் செய்த’ 
என்கிறார். நெடியோனை 
- பாண்டவர்கள் காரியம் செய்து போகிற அன்றும், ‘நிறைவு பெறாத மனத்தையுடையவனாய் இருக்கிறேன்,’ 
என்கிறபடியே, ‘அவர்கள் காரியம் ஒன்றும் செய்யப்பெற்றிலோம்,’ என்றிருந்தபடி.
 தென்குருகுகூர்ச் 
சடகோபன் குற்றேவல்கள் - ஆழ்வார் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை எல்லையாகவுடைய 
கைங்கரியத்தை வாசிகமாகப் பண்ணுகையாலே அந்தரங்க அடிமை ஆயிற்றுச் சர்வேசுவரனுக்கு. அடி ஆர்ந்த 
ஆயிரத்துள் - இருக்கு வேதம் போலவும், 1‘நான்கு அடிகளோடு கூடியதும் ஒவ்வோரடியும் 
எழுத்துக்களால் ஒத்திருப்பதும்’ என்கிற ஸ்ரீ ராமாயணம் போலவும் அடிகள் நிறைவுற்ற ஆயிரம். அவன் 
தொண்டர்மேல் முடிவு இவை பத்து - 2இதில் சர்வேசுவரனைச் சொன்ன இடங்கள் உபசர்ஜ்ஜன 
கோடியிலேயாமித்தனை. ஆரக்கற்கில் - நெஞ்சிலே படும்படி கற்க ஆற்றல் உள்ளவர்களாகில். இனி, 
‘இதில் ஒரு பாட்டும் விழ விடாதே கற்கில்’ என்னுதல். சன்மம் செய்யாமை முடியும் - அடியார்கட்கு 
அடிமையாம் தன்மைக்கு விரோதியான பிறவியிலே சேர்தல் அறும்.
 
(11) 
திருவாய்மொழி நூற்றந்தாதி 
        பயிலும் திருமால் பதந்தன்னில் 
நெஞ்சம்தயலுண்டு நிற்கும் ததியர்க்கு 
- இயல்வுடனே
 ஆளானார்க்கு ஆளாகும் 
மாறன் அடியதனில்
 ஆளாகார் சன்மமுடி யா.
 
 ஆழ்வார் எம்பெருமானார் 
சீயர் திருவடிகளே அரண்.
 _____________________________________________________
 
1. 
ஸ்ரீராமா. பால. 2 : 18.
 2. இத்திருவாய்மொழியில் 
சர்வேசுவரனையும் அருளிச்செய்திருக்க, ‘இவை
 பத்தும் அவன் தொண்டர்மேல் முடிவு’ என்று கூறல் 
பொருந்துமோ?’
 என்னும் வினாவிற்கு விடையாக, ‘இதில் சர்வேசுவரனை’ என்று தொடங்கி
 அருளிச்செய்கிறார். 
உபசர்ஜ்ஜன கோடியிலேயாமித்தனை -
 முக்கியமில்லாமையிலே சேருமித்தனை. ‘கல்வியிற்பெரியன் 
கம்பன்;
 தெய்வப் புலவன் திருவள்ளுவன்’ என்பன போன்று அடியார்கட்கு
 விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன 
இத்தனை என்றபடி.
 |