|
அன
அன்றோ? 1‘சாஸ்திரங்களிற்
கூறப்பட்ட காரியங்களைத் தொடங்குவது வீண் ஆகாது; தோஷமும் இல்லை,’ என்பது
ஸ்ரீகீதை.
மண் கொண்ட வாமனன் -
முடி சூடின பின்பும் 2கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட
பின்பும்
‘வாமனன்’
என்கிறார்காணும். அன்றியே,
இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும்
‘வாமனன்’
என்கிறார் என்னுதல்.
ஏற மகிழ்ந்து செல் - தன்னை மேற்கொள்ள, அத்தாலே வந்த மகிழ்ச்சியின் மிகுதிக்குப்
போக்குவிட்டுச் சஞ்சரியாநிற்கை. பண் கொண்ட - 3வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச்
சொல்லுதல்; அன்றி, 4கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச்
சொல்லுதல். சிறகு ஒலி பாவித்து - திருவடி சிறகின் ஒலியையே பாவித்து. திண்கொள் ஓர்க்கும்
என் செவிகள் - முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை;
இதனையே திண்ணிதாகப் புத்திபண்ணாநின்றது. அதன் பக்கல் 5பக்ஷபாதமன்றோ அதற்கு
அடி?
(5)
305
செவிகளால் ஆரநின்
கீர்த்திக் கனியெனும்
கவிகளே காலப்பண்
தேன்உறைப் பத்துற்றுப்
புவியின்மேல்
பொன்நெடுஞ் சக்கரத்து உன்னையே
அவிவுஇன்றி ஆதரிக்
கும்எனது ஆவியே.
____________________________________________________
1.
ஸ்ரீகீதை,
2 : 40.
2. கருந்தரை - பாழ்நிலம்;
என்றது, முடி சூடுதற்குமுன் உள்ள நிலையைக்
குறித்தது.
3. ‘பண்’ என்பதற்கு
இரு பொருள்: முதற்பொருள், சேணம்; இரண்டாவது
பொருள், சாமங்கள்.
4. ‘சிரஞ்சேத னன்விழி
தேகம் சிறையின் சினைபதங்கம்
தரம்தோள்கள்
ஊரு வடிவம் பெயர்எசுர் சாமமுமாம்
பரந்தே தமதடி
யார்க்குள்ள பாவங்கள் பாற்றியருள்
சுரந்தே
யளிக்கும் அரங்கர்தம் ஊர்திச் சுவணனுக்கே,’
என்றார்
திவ்விய
கவியும்.
கருடனுக்குத் திருவிருத்தென்பது
சிரசு; ஸ்தோமம் என்பது ஆத்துமா.
காயத்ரி என்பது கண்: சாமம் என்பது உடல்; பிருஹத்ரதந்தரம்
என்பவை
இரண்டும் சிறகுகள்; யஜ்ஞாயஜ்ஞியம் என்பது தோகை, மற்றைச் சந்த
சுக்கள் மற்றை உறுப்புகள்,
பெயர் யஜீஸீக்கள் என்று வேதத்திலே
கூறப்பட்டிருக்கிறது.
5. பக்ஷபாதம் என்பது
சிலேடை: ‘சிறகு ஒலியின் பக்கல் தமக்கு உண்டான
காதல்’ என்பது பொருள். ‘திருவடியால் உண்டான
பக்ஷபாதம்’ என்பது
தொனி.
|