| அன 
அன்றோ? 1‘சாஸ்திரங்களிற் 
கூறப்பட்ட காரியங்களைத் தொடங்குவது வீண் ஆகாது; தோஷமும் இல்லை,’ என்பது 
ஸ்ரீகீதை. 
மண் கொண்ட வாமனன் - 
முடி சூடின பின்பும் 2கருந்தரையில் பேர் சொல்லும் அந்தரங்கரைப் போலே மண் கொண்ட 
பின்பும் 
‘வாமனன்’ 
என்கிறார்காணும். அன்றியே, 
இதிலே தாம் துவக்குண்டபடியாலே வளர்ந்த பின்பும் 
‘வாமனன்’ 
என்கிறார் என்னுதல். 
ஏற மகிழ்ந்து செல் - தன்னை மேற்கொள்ள, அத்தாலே வந்த மகிழ்ச்சியின் மிகுதிக்குப் 
போக்குவிட்டுச் சஞ்சரியாநிற்கை. பண் கொண்ட - 3வாகனத்தின்மேல் இடுகிற சேணத்தைச் 
சொல்லுதல்; அன்றி, 4கருடன் உருவம் வேதமே ஆகையாலே பிருஹத்ரதந்தரம் முதலிய சாமங்களைச் 
சொல்லுதல். சிறகு ஒலி பாவித்து - திருவடி சிறகின் ஒலியையே பாவித்து. திண்கொள் ஓர்க்கும் 
என் செவிகள் - முன்னே நின்று சிலர் வார்த்தை சொன்னால் அதிலே செவி தாழ்கிறது இல்லை; 
இதனையே திண்ணிதாகப் புத்திபண்ணாநின்றது. அதன் பக்கல் 5பக்ஷபாதமன்றோ அதற்கு 
அடி? 
(5) 
305 
        செவிகளால் ஆரநின் 
கீர்த்திக் கனியெனும்கவிகளே காலப்பண் 
தேன்உறைப் பத்துற்றுப்
 புவியின்மேல் 
பொன்நெடுஞ் சக்கரத்து உன்னையே
 அவிவுஇன்றி ஆதரிக் 
கும்எனது ஆவியே.
 
____________________________________________________ 
1. 
ஸ்ரீகீதை, 
2 : 40.
 2. கருந்தரை - பாழ்நிலம்; 
என்றது, முடி சூடுதற்குமுன் உள்ள நிலையைக்
 குறித்தது.
 
 3. ‘பண்’ என்பதற்கு 
இரு பொருள்: முதற்பொருள், சேணம்; இரண்டாவது
 பொருள், சாமங்கள்.
 
 4. ‘சிரஞ்சேத னன்விழி 
தேகம் சிறையின் சினைபதங்கம்
 தரம்தோள்கள் 
ஊரு வடிவம் பெயர்எசுர் சாமமுமாம்
 பரந்தே தமதடி 
யார்க்குள்ள பாவங்கள் பாற்றியருள்
 சுரந்தே 
யளிக்கும் அரங்கர்தம் ஊர்திச் சுவணனுக்கே,’
 
 என்றார் 
திவ்விய 
கவியும்.
 
 கருடனுக்குத் திருவிருத்தென்பது 
சிரசு; ஸ்தோமம் என்பது ஆத்துமா.
 காயத்ரி என்பது கண்: சாமம் என்பது உடல்; பிருஹத்ரதந்தரம் 
என்பவை
 இரண்டும் சிறகுகள்; யஜ்ஞாயஜ்ஞியம் என்பது தோகை, மற்றைச் சந்த
 சுக்கள் மற்றை உறுப்புகள், 
பெயர் யஜீஸீக்கள் என்று வேதத்திலே
 கூறப்பட்டிருக்கிறது.
 
 5. பக்ஷபாதம் என்பது 
சிலேடை: ‘சிறகு ஒலியின் பக்கல் தமக்கு உண்டான
 காதல்’ என்பது பொருள். ‘திருவடியால் உண்டான 
பக்ஷபாதம்’ என்பது
 தொனி.
 |