முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
309

கள

களிலும் அவனை அடி விடாரே. ‘மஹரிஷியைப் போன்று கண்ணழகைக் காண ஆசைப்படாமல், இவர் திருவடிகளின் அழகைக் காண ஆசைப்படுவான் என்?’ எனில், தந்தாம் ஜீவனத்தை நோக்கத் தேடுமித்தனை அன்றோ எல்லாரும்? ஆகையாலே, இவரும் தம்முடைய 1ஜீவனத்தை நோக்கத் தேடுகிறார்.

    பேதுற்று - அறிவு கெட்டு. வருந்தி - இழந்த விஷயத்துக்குத் தக்கபடி அன்றோ கிலேசமும் இருப்பது? நான் - 2அடியே பிடித்து ஜீவித்துப் போந்த நான்; 3‘நின் செம் மா பாத பற்புத்தலை சேர்த்து ஒல்லை’ என்கிறபடியே, அத்திருவடிகள் பெறில் 4தலையாக ஜீவித்து, அஃது இல்லையாகில் இல்லையாம்படியான நான் என்றபடி. வாசகமாலை கொண்டு - 5ஒருமலை எடுத்தாற் போலே ஆயிற்று, இவர்க்கு ஒரு சொற்கொண்டு சொல்லுகை. உன்னை - 6‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாமல் திரும்புகின்றனவோ’ என்கிறபடியே, பேசித் தலைக்கட்ட ஒண்ணாத உன்னை. இருந்து இருந்து - 7ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால் அது தலைக்கட்டு

___________________________________________________

  இவர்க்கு உண்டாயிருக்கிறது என்னும் இடம் தோன்ற, ‘எல்லா
  நிலைகளிலும் அவனை அடி விடாரே’ என்று அருளிச்செய்கிறார். அடி
  என்றது சிலேடை: திருவடிகள்; முதல்.

1. ‘ஜீவனத்தை நோக்க’ என்பதற்குப் ‘பிராணனை ரக்ஷிக்க’ என்பது
  தொனிப்பொருள்; தமக்குப் பிராணனான திருவடிகளை நோக்க என்பது
  நேர்பொருள்.

2. ‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்றதனைக் கடாக்ஷித்து, அருளிச்
  செய்கிறார், ‘அடியே பிடித்து ஜீவித்துப் போந்த நான்’ என்று. ‘அடியே
  பிடித்து’ என்பதற்குத் திருவடிகளையே பிடித்து என்பது நேர்ப்பொருள்:
  ‘முதலிலே பிடித்து’ என்பது தொனிப்பொருள்.

3. திருவாய். 2. 9 : 1.

4. தலையாக ஜீவித்து - ‘தலையிலே வைத்துக்கொண்டு ஜீவித்து’ என்பது
  நேர்ப்பொருள்; ‘நன்றாக ஜீவித்து’ என்பது தொனிப்பொருள்.

5. ‘கொண்டு’ என்றதற்கு பாவம் ‘ஒருமலை எடுத்தாற்போலேயாயிற்று,’
  என்பது.

6. தைத்திரீய ஆனந். 9 : 1.

7. இருந்து இருந்து’  அடுக்குக்கு, பாவம் ‘ஒருகால் ஒன்று சொல்லப்புக்கால்’
  என்று தொடங்கும் வாக்கியம். பட்டைப்பொதி சோறு - கமுகம்
  பட்டையிலே கட்டின கட்டுச்சோறு. பட்டைப் பொதிசோறு அவிழ்க்க
  வேண்டுங்காணும்’ என்றது, ‘நடுவே நடுவே பகவத் ஸ்மரணத்தாலே
  இளைப்பாற வேண்டும்,’ என்பது கருத்து.