முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
48

தெ

தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச்செய்கிறார். வந்தே - அது தானும் முகந்தோற்றாதபடி நின்று அருளவொண்ணாது; என் கண்களுக்கு இலக்காம்படி இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று, எனக்காக ஓர் அவதாரத்தைச் செய்தேயாகிலும் வந்தருள வேண்டும்.

(4)

238

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இதுவாகில்,
கொந்தார்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்! யான்உனை எங்குவந்து அணுகிற்பனே?

    பொ-ரை : ‘பிரஹலாதன், கஜேந்திரன் இவர்களுக்கு உதவி செய்வதற்கு
வந்தது போன்று வந்தாகிலும் எனது மனத்தினை நீ சிதறுண்டு போகாதபடி செய்கிறாயில்லை; இங்ஙனம் அருள் செய்யாமையாகிய இதுவே உன்னுடைய தன்மையாகில், பூங்கொத்துகள் நிறைந்த காயாவினுடைய சிறந்த மலர் போன்ற அழகிய நிறத்தையுடைய என் தந்தையே! யான் உன்னை எங்ஙனம் வந்து சேர்வேன்?’ என்கிறார்.

    வி-கு : ‘வந்தும் செய்யாய்’ என்க. ‘செய்யாய்’ என்பது எதிர்மறை வினைமுற்று.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘நீர் ‘வந்தே அருளவேண்டும்’ என்கிறீர்; இது நமக்குத் தட்டுப்படும்; ஒரு முறை பதினாயிரம் ஆண்டு இருந்தோம்; ஒரு முறை நூறு ஆண்டு இருந்தோம்; வருகை நமக்குப் பணியுண்டுகாணும்’ என்ன, ‘எனக்கும் அவ்வவதாரங்கள்போன்று சிலநாள் இருந்து உதவப்பெறில் அழகியது; அது செய்யத் திருவுள்ளமின்றாகில், யானைக்குத் தோன்றியது போலேயும், பிரஹலாதனுக்குத் தோன்றியது போலேயும் எனக்கும் ஒரு தோற்றரவு தோன்றியேயாகிலும் உதவவேண்டும்,’ என்கிறார்.

    வந்தாய் போலே வந்து - வந்து சில நாள் இருந்த இராம கிருஷ்ண அவதாரங்களைப் போன்று அன்றிக்கே,

___________________________________________________

1. ‘வந்தாய் போலே வந்தும்’ என்றதிலே நோக்காக அவதாரிகை
  அருளிச்செய்கிறார். தட்டுப்படும் - பிரயாசைப்படும். பதினாயிரமாண்டு -
  ஸ்ரீராமாவதாரம். நூறாண்டு - கிருஷ்ணாவதாரம். பணியுண்டு - காரியமுண்டு.