முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
52

New Page 1

டைய நன்றாய் விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக்கடவேன்?

(6)

240

எஞ்ஞான்றும் நாம்இருந்
    திருந்துஇரங்கி, நெஞ்சே!
மெய்ஞ்ஞானம் இன்றி
    வினைஇயல் பிறப்புஅழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும்
    ஒழிவுஅற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக்
    கண்ணனை மேவுதுமே.   

    பொ-ரை : ‘மனமே! எப்பொழுதும் இருந்து இருந்து வருந்தி உண்மை ஞானமில்லாமல் வினைகளால் உண்டாகின்ற பிறவிகளிலே மூழ்கி அலைகின்ற நாம், எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து நின்ற உண்மை ஞானத்தின் உருவமான ஒளியையுடைய கண்ணபிரானை அடைவதற்கு முடியுமோ?’ என்கிறார்.

    வி-கு : ‘அழுந்தி அலைகின்ற நாம்’ என்று ‘அலைகின்ற’ என்னும் வினையை வருவித்து ‘அழுந்தி’ என்ற எச்சத்துடன் கூட்டி முடிக்க. இரண்டாமடியும் நான்காமடியும் ஆசிடையிட்ட எதுகை.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘நின் நன் பொன் சோதித்தாள்’ என்று திருவடிகளின் போக்யதையை நினைத்தவாறே திருவுள்ளம் பதறத் தொடங்கிற்று; கெடுவாய்! உன் படி ஆராயாமல் நல்லதை ஆசைப்பட்டால் கிடைக்குமோ?’ என்கிறார்.

    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி - காலமெல்லாம் நாம் இருந்து 2சீழ்கிச் சீழ்கி அழுதால் என்ன பயனுண்டு

___________________________________________________

1. ‘மெய்ஞ்ஞானமின்றி’ என்றதனைக் கடாக்ஷித்துக் ‘கெடுவாய்! உன் படி
  ஆராயாமல்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. சீழ்கி - விம்மி.

  ‘பாலரைப்போற் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
  காலத்தால் தேசத்தால் கைகழிந்த - சால
  அரிதான போகத்தில் ஆசையுற்று நைந்தான்
  குருகூரில் வந்துதித்த கோ.’

  என்ற இடத்துச் சீழ்கி என்பது இப்பொருளில் வத்திருத்தல் அறிக.